குக்கர் கிடைச்சாச்சு; மார்ச் 15ல் பெயர் சூட்டு விழா! புது கட்சி, புதூ சின்னம், கலக்குறே சந்த்ரு..!

dinakaran cooker - 2026

சென்னை:

மார்ச் 15 ஆம் தேதியன்று, கட்சியின் பெயரையும் கட்சிக் கொடியையும் அறிமுகப் படுத்தவுள்ளார் டிடிவி தினகரன். நடிகர் கமல்ஹாசன் கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகப் படுத்தியுள்ள சூழலில், தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது; அதை நிரப்பவே நான் வருகிறேன் என்று ரஜினிகாந்த் பேசியுள்ள நிலையில், தமிழக அரசியலில் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் என்று ஆதரவாளர்களால் விளம்பரப்படுத்தப் படும் டிடிவி தினகரன் மார்ச் 15ல் கட்சியின் பெயரை அறிவித்து, கொடியை அறிமுகப் படுத்தவுள்ளார்.

அதிமுகவை மீட்பதே லட்சியம், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டே தீருவோம் என்று ஒரே குறிக்கோளில் இயங்க்கிவந்த டிடிவி தினகரன், பின்னாளில் எடப்பாடி அணியிடம் இருந்து மீட்க மேற்கொண்ட முயற்சிகள் நடக்காததால், தனது ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள புதிய கட்சி, புதிய சின்னம், புதிய பெயர் என அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடத்தேர்தலில் அவர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு, தொகுதியில் உள்ள பெண்களின் வீடுகளில் குக்கர் விசில் பலமாக அடிக்கும்படி பார்த்துக் கொண்டார். .அவரது குக்கரின் விசில் சத்தத்தில், இரட்டை இலை வாடி வதங்கியது. உதயசூரியன் உருக்குலைந்து போட்ட காசைக்கூட வாங்க முடியாமல் சுருண்டு படுத்தது. தாமரையோ நோட்டாவுடன் போட்டியிட்டுத் தோற்றது. நோட்டு மயமாய் தொகுதி ஆனபோதும், நோட்டா மட்டும் சில யோக்கியர்களின் புண்ணியத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

இத்தகைய நம்பிக்கையை தன் ஆதரவாளர்களிடம் விதைத்து விட்ட தினகரன், அவர்களைத் தக்க வைக்க இப்போது பெரும் பாடு படுகிறார். காரணம், தினகரனுடன் தொடர்பில் உள்ளவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்கள் எடப்பாடி குழுவினர். இதனால் ஏதோ ஒரு கட்சிப் பதவியில் அமர்ந்து கொண்டு அவரவர் ஊரில் அரசாங்கம் செய்து கொண்டிருந்த கட்சிக்காரர்களெல்லாம் கதி கலங்கிப் போயுள்ளனர். வேறு வழி இல்லாததால், கட்சியை துவங்கி, ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவிகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் டிடிவி தினகரன்.
ttv dinakaran invite - 2026

இரட்டை இலை மீட்பு தோல்வியடைந்ததால், தாம் போட்டியிட்டு வென்ற குக்கர் சின்னத்தையே தனக்கு வரும் தேர்தல்களில் ஒதுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு தில்லி உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி விட்டது. எனவே, குக்கர் கைக்கு வந்து விட்டது. தொடர்ந்து விசிலடிக்கவும் தயாராகிவிட்டது. ஆனால், தாம் ஒரு கட்சியின் பெயரைப் பதிவு செய்தாக வேண்டுமே என்று மூன்று பெயர்களைக் கொடுத்து, ஏதோ ஒன்றை கோரினார். அதனையும் பரிசீலித்து வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் என்ற மூன்று பெயர்களில் ஒன்றை வழங்குமாறு டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் கேட்டுள்ளார்

ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பெயர்களை டிடிவி தினகரன் தனது கட்சிக்கு பயன்படுத்தக் கூடாது என்று ஓபிஎஸ், எடப்பாடி தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இவர்களின் பெயர்கள் இல்லாமல் தினகரன் செயல்பட வாய்ப்பில்லை. மேலும் உயர்நீதிமன்றமும் இந்த 3 பெயர்களில் ஒன்றை வழங்குமாறு கூறிவிட்டதால், எப்படியும் அதிமுக., என்பதன் சுருக்கம் இந்தப் பெயர்களில் வந்துவிடும்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியிருப்பது…
மதுரை மேலூரில் 15-ஆம் தேதி நடக்கும் விழாவில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது. அன்று காலை 9 மணிக்கு கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பெயர் அறிவிக்கப்படும். அதிமுகவை கைப்பற்றும் வரை தனி ஒரு இயக்கமாக செயல்படுவோம். மேலூரில் நடைபெறும் கூட்டத்துக்கு தொண்டர்கள் அதிக அளவில் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories