கிழிந்த ரூபாய் நோட்டுகளை இன்று மாற்றலாம்: ரிசர்வ் வங்கி

Published:

சென்னை சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, சனிக்கிழமை இன்று புதிய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், பழைய, கிழிந்த, சிதைந்த, அழுக்கான குறிப்பாக சிறிய மதிப்பிலக்க 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்றி அவற்றுக்குப் பதிலாக புதிய நோட்டுகள், நாணயங்கள் வழங்கப்படவுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவிதாங்கூர், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலாகாபாத் வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, கனரா வங்கி, விஜயா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைஸியா வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கி, இந்தஸ் இந்த் வங்கி, ஃபெடரல் வங்கி, கோடக் மஹேந்திரா வங்கி, டி.என்.எஸ்.சி. வங்கி, கதோலிக் சிரியன் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் முக்கியக் கிளைகளில் இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img