புது தில்லி: நடிகர் ரஜினி காந்துக்கு பத்ம விபூஷண் விருது மத்திய அரசால் நிராகரிக்கப் பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இருந்து பத்ம பூஷண் விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த், தொழிலதிபர் ஷிவ் நாடார் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தும், அவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. இந்த முறை 1,897 பேரின் பெயர்கள் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாபா ராம்தேவ், மாதா அமிர்தானந்தமயி, ரஜினிகாந்த், ராஜ்குமார், ஹிரானி, ரோஹித் ஷெட்டி, ஜிவிகே ரெட்டி, ஷிவ் நாடார், வாய்ப்பாட்டு கலைஞர் கிரிஜா தேவி என பிரபலங்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டும், ஜன.25 அன்று வெளியான பட்டியலில் இல்லாமல் போனது. குறிப்பாக, ரஜினி காந்த் ஏற்கெனவே பத்ம பூஷண் விருது பெற்றுள்ளார் என்றாலும், அவரது பெயரை பத்ம விபூஷண் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. தமிழகத்தில் அரசியல் பின்னணியில் பல்வேறு விதமான காய் நகர்த்தல்கள் நிகழும் நிலையில், ரஜினிக்கு பத்ம விபூஷண் நிராகரிக்கப்பட்டது பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது.
ரஜினிக்கு பத்ம பூஷண் விருது: மத்திய அரசு மறுப்பு
Popular Categories


