கணவனின் கருப்பு கலர் பிடிக்கலையாம்: தீர்த்துக் கட்டிய மனைவி கைது

அனந்த்:
கணவனின் கருப்பு கலர் பிடிக்கலை என்று காரணம் கூறி, அவரது மனைவி அவரைத் தீர்த்துக் கட்டியுள்ளார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் அனந்த் மாவட்டத்தில் பெட்லாட் தாலுகா, சுந்தரானா கிராமத்தைச் சேர்ந்தவர் பர்ஸானா பானு. 22 வயதாகும் இவர், தனது கணவர் ஃபரூக் மாலேக் என்ற 22 வயதுக் கணவனை குத்திக் கொன்றுள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம், அவரது கருப்பு தோல் கலர் பிடிக்கவில்லை என்பதுதானாம். இதனை பேட்லாட் தாலுகா டிஎஸ்பி பி ஆர். கேலாட் கூறியுள்ளார்.
பர்ஸானா, ஃபரூக் இருவருமே  2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், ஃபரூக்கின் தோல் கலர் பர்ஸானாவுக்குப் பிடிக்கவில்லையாம். இதனால் இருவருமே உடலுறவு கொள்ளவில்லை என்பதுடன், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்படுமாம்.
இதனிடையே அவரது கணவரை தவிர்ப்பதற்காக, பர்ஸானா தனது பெற்றோரின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவிடுவாராம். இதனிடையே 10 தினங்களுக்கு முன்னர் கணவன் வீட்டுக்கு திரும்பிய பர்ஸானாவுடன், ஃபரூக் உடலுறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், பர்ஸானா அதனை மறுத்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், புதன்கிழமை அன்று பர்ஸானாவை ஃபரூக் தாக்கியுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று தனது வயல் புறத்துக்கு வருமாறு பர்ஸானாவை அழைத்துள்ளார் ஃபரூக். ஆனால், பர்ஸானா ஒரு சுத்தியலை எடுத்து ஃபரூக்கை தலையில் தாக்கியுள்ளார். இதில் ஃபரூக் உயிரிழந்தார்.
இதை அடுத்து பர்ஸானாவைக் கைது செய்த போலீஸார், அவர் மீது, 302வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Topics

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories