பாட்னா: பீகாரில் நிலநடுக்கத்தின் விளைவால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். இதற்காக 5 குழுக்கள் தனியாக அமைக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதல்வர் நிதிஷ் குமார் தில்லியில் இருந்து பாட்னாவுக்கு உடனடியாக விரைந்தார். இந்நிலையில் தர்பங்கா மாவட்ட ஆட்சியர் குமார் ரவி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் 8 வயதுக் குழந்தையும் பெண் ஒருவரும் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்துவிட்டதாகவும் 17 பேர் காயமடைந்ததாகவும் கூறினார்.

