மண்டையில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்த சசிதரூரை நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!

nirmala sitharaman - 2026

கோயில் துலாபாரம் அறுந்துவிழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரை மருத்துவமனையில் சந்தித்து, அவருக்குக் கை கொடுத்து விரைவில் குணமடைய பிரார்த்திப் பதாகக் கூறினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனை வரவேற்றுப் பாராட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சசிதரூர்.

நேற்று மலையாள வருடம் கொல்லம் ஆண்டின் துவக்கமான சித்திரை விஷூ கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் துலாபாரம் செய்ய நேர்த்திக்கடன் செலுத்தினார் சசிதரூர்!

அப்போது துலாபார கொக்கி அறுந்து சசிதரூரின் தலையில் விழுந்ததில், அவரது தலையில் அடிபட்டது. ரத்தம் வழிந்தது. காயமடைந்த அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக கேரளா வந்துள்ள ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், சசிதரூரை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். சசிதரூருடன் கைகுலுக்கி, புன்னகையுடன் நலன் விசாரித்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சசிதரூர், நிர்மலா சீதாராமனை புகழ்ந்தும் பாராட்டியும் கருத்து தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிர்மலா சீதாராமன், இன்று காலை மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். மனிதநேயம் என்பது இந்திய அரசியலில் அரிதான பண்பு. ஆனால் நல்ல பண்புக்கு உதாரணமாக நிர்மலா சீதாராமன் என்னை சந்தித்து நலம் விசாரித்தது நெகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

1 COMMENT

  1. இப்போது தெரிந்திருக்குமே பி ஜெ பி காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று. இனிமேலாவது அவதூறாக பேசுவதை மற்றவர்கள் நிறுத்துவர்களா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories