அமேதி தொகுதியில்… தீயணைக்கும் பணியில் நேரடியாகக் களத்தில் இறங்கிய ஸ்ம்ருதி இரானி!

smiriti irani - 2026

லக்னௌ: தான் பிரசாரத்தில் இருந்த போது, அமேதி தொகுதியில் திடீரென ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் நேரடியாகக் களமிறங்கி உதவி செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றார் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிடுகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு எதிராக கடும் போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்மிருதி இரானி, இன்று செய்த ஒரு செயல் தொகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நன்மதிப்பையும் ஏற்படுத்தியது.

கடந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார் ஸ்மிருதி இரானி. ஆனால் இந்த முறை அமேதியில் உறுதியாக வெற்றிபெறுவேன்; காரணம், தொகுதிக்குச் சென்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை அமேதி மக்களுக்குச் செய்துள்ளேன். அம்மக்களுடன் ஒன்றாகக் கலந்துள்ளேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஸ்மிருதி இரானி.

இன்றும் அதே போல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் ஸ்மிருதி இரானி. அப்போது தவாரா என்ற கிராமத்தில் விவசாய நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிராம மக்கள் பதறி அடித்து ஓடினர். தீயணைப்பு வாகனங்கள் பரபரப்பாக போராடி தீயணைப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அமைச்சர் ஸ்மிருதி இரானி அங்கே வந்தார். சற்றும் நேரம் கடத்தாமல் உடனே அடிபம்பில் நீர் அடித்து தானும் தீயணைக்க நீர் எடுத்து தருவது, தீயணைப்பில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது என்று சுறுசுறுப்பாகப் பணியாற்றினார். இதனைக் கண்டு அந்த கிராமத்தின் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஸ்மிருதி இரானியின் அன்பைக் கண்டு நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories