மம்தாவை மீண்டும் உசுப்பேற்றிய மோடி! வங்கத்துப் புனித மண்ணில் செய்த ரசகுல்லா ‘பிரசாதம்’!

Published:

modi in theni - 2026

ஸ்ரீராம் பூர் என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்!  அப்போது அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு பேசினார்…

எனக்கு ரசகுல்லாவை அனுப்ப விரும்பும் தீதீ மம்தா பானர்ஜி ரசகுல்லாவை மண் மற்றும் கூழாங்கற்களை வைத்து உருவாக்கி அதை அனுப்ப விரும்புவதாகக் கூறி இருந்தார்! மிகப்பெரும் ஆளுமைகளான ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஜெகதீஸ் சந்திரபோஸ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய பெரும் மேதைகளின் சாரத்தை தாங்கியது வங்கத்துப் புனித மண்.

மோடி ரசகுல்லாவைப் பெறும்போது குறிப்பாக இந்தப் புனித மண் நிறைந்த ரசகுல்லாக்களை மோடி பெறும்போது அதனை பிரசாதம் ஆகவே மோடி எடுத்துக் கொள்வார் என்று கூறினார்

முன்னதாக நடிகர் அக்ஷய் குமாருடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பிரதமர் மோடி தனக்கு அரசியல் பின்புலத்தைக் கடந்தும் நட்புகள் அதிகம் உண்டு … எடுத்துக்காட்டாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருடந்தோறும் எனக்கு ரசகுல்லா மற்றும் குர்தாக்களை அனுப்புவார் என்று கூறியிருந்தார்!

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி நான் மோடிக்கு கூழாங்கற்களும் சகதியும் கொண்டதாக ரசகுல்லாக்களை அனுப்புவேன்! அதைக் கடித்து மோடியின் பற்கள் உடையட்டும் என்று சாபம் கொடுக்கும் விதத்தில் பேசினார்

இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது! இந்நேரத்தில் மோடி மண்ணின் மகிமையை எடுத்துக் கூறும் விதமாக பதிலளித்து மீண்டும் மமதா பானர்ஜியை சீண்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img