December 5, 2025, 9:48 PM
26.6 C
Chennai

கேரளத்தை விமர்சிக்கும் முன் குஜராத் பற்றி பேசுங்கள்: உம்மன் சாண்டி

திருவனந்தபுரம்:

கேரளத்தை சோமாலியாவுடன் பிரதமர் மோடி ஒப்பிட்டு பேசியதற்கு பதிலடியாக, உம்மன் சாண்டி, ’கேரளாவை விமர்சிக்கும் முன் குஜராத் பற்றி பேசுங்கள்’ என்று கூறியுள்ளார்.

கேரளா மாநிலத்தில் வரும் 16-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இதுவரையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் போட்டிபோட்டு விமர்சனங்களை முன்வைத்தனர். பிரதமர் மோடி பிரசார கூட்டங்களில் பேசியபோது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளை விமர்சனம் செய்தார். இதில் ஒருபடி மேலே போன பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசிஉள்ளார். பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டது உம்மன் சாண்டிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் அரசியல் நாகரித்தை வெளிக்காட்ட கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசியதை திரும்ப பெறவேண்டும் என்று உம்மன் சாண்டி வலியுறுத்தி உள்ளார். கேரளாவில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குழந்தைகளின் உடல்நலத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு உள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்து உள்ள கேரளா முதல்-மந்திரி உம்மன் சாண்டி பொருளாதாரத்திலும், மனிதவள மேம்பாட்டிலும் கேரளா தேசிய சராசரியில் உயர்நிலையில் உள்ளது. ஆனால் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசிஉள்ளார் என்று கூறிஉள்ளார். சோமாலியாவுடன் தேசத்தின் ஒருமாநிலத்தை ஒப்பிடுவது பிரதமர் மோடிக்கு அவமானம் கிடையாதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு வருட ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தோல்வி அடைந்துவிட்டார் என்றும் விமர்சனம் செய்து உள்ளார்.

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து உள்ள உம்மன் சாண்டி, “பிரதமர் மோடி அவர்கள் நான் கோரிக்கை விடுக்கின்றேன், கேரளாவில் உள்ள பிரச்சனைகளை பேசுவதற்கு முன்னதாக குஜராத் மாநில வளர்ச்சியை பற்றி பேசுங்களேன். நீங்கள் குஜராத் மாநிலத்தில் பணம் படைத்தோருக்கு சாதகமான கொள்கையினை செயல்படுத்திய போது, உண்மையில் ஏழை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர். எங்களுடைய மாநிலத்திலும் இதுபோன்ற கொள்கையினை அமல்படுத்தவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?. நாங்கள் எப்போது எல்லாம் பெரிய திட்டங்களை அமல்படுத்துகிறோமோ, அப்போது எல்லாம் நாங்கள் சாதாரண மனிதனின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்,”

பீகார் மாநிலத்தில் கோடிக் கணக்கில் திட்டங்களை அறிவித்தீர்கள் ஆனால் பிற மாநில மக்களை ஏமாற்றினீர்கள்.. இந்த முறை நீங்கள் இதுபோன்று பெரிய வாக்குறுதியை மாநிலத்திற்கு அறிவிக்கவில்லை, இதுவே எங்களுக்கு பெரிய நிவாரணம். உங்களுடைய அரசின் தோல்வியை பட்டியலிட விரும்புகின்றேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை நிறுத்தினீர்கள், கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தாலும் நீங்கள் இதுவரையில் பொதுமக்கள் நலம்பெறும் வகையில் ஆயில் விற்பனை விலையை குறைக்கவில்லை. வங்கிகளுக்கு கடன் கொடுக்கவேண்டிய விஜய் மல்லையாவை பத்திரமாக நாட்டை விட்டு வெளியே அனுமதித்துவிட்டீர்கள் என்று உம்மன் சாண்டி பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மேலும் கடந்த 4 வருடங்களில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது உங்களுக்கு தெரியாது, இதில் 45 ஆயிரம் கடந்த 2 வருடங்களில் மூடப்படவில்லை? என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிஉள்ளார். ஏழைகளுக்கு எதிரான திட்டங்களையே பிரதமர் மோடி குஜராத் மற்றும் பிற பகுதிகளில் அமல்படுத்தி உள்ளார். “உங்களுடைய பொய்யான வாக்குறுதிகளை மக்கள் பார்த்துவிட்டனர், நீங்கள் கேரளாவையில் கால்பதிக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்,” என்று உம்மன் சாண்டி கூறிஉள்ளார்.

பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசியதை தொடர்ந்து அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்ச்சிக்கப்படுகிறது. #PoMoneModi (Go Off Modi) என்ற ஹஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்குள் பதிவு செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories