December 5, 2025, 5:20 PM
27.9 C
Chennai

ஒரு ரன்னில் கோப்பையை கோட்டை விட்ட சென்னை அணி

ipl csk - 2025

ஐபிஎல் போட்டிகளில் இறுதிப்போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது

இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது மும்பை அணி

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது

மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர் டிகாக் 29 ரன்களை எடுத்தார் ரோகித் சர்மா சூரியகுமார் ஆகியோர் தலா 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

மும்பை அணியில் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார் . பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 16 ரன்கள் எடுத்தார்

மற்ற வீரர்கள் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர் அதனால் மும்பை அணி 20 ஓவரில் 149 ரன் எடுத்து 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது

இதையடுத்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் துவக்க ஆட்டக்காரர் du plessis 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்

சென்னை அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு சுரேஷ் ரெய்னா கேப்டன் தோனி மூவரும் இரட்டை இலக்கத்தை கடப்பதற்குள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினர்

அடுத்து பிராவோ 15 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடினார்

அவரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி இலக்குக்கு அருகே வர உறுதுணையாக இருந்தார்.
இன்னொரு முனையில் ஜடேஜா ரன் எடுக்க திணறினார்.

அடித்து ஆட வேண்டிய கடைசி ஓவரில் ரன் எடுக்க இயலாமல் ஜடேஜா திணறினார். மறுமுனையில் நன்கு ஆடிவந்த வாட்சன் பாண்டியாவால் ரன் அவுட் ஆனார் அவர் 80 ரன்கள் எடுத்தார்.

கடைசி இரண்டு பந்தில் நான்கு ரன் தேவைப்பட்ட நிலையில் ஒரு பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அப்போது மலிங்கா பந்துவீச்சில் தாக்கூர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்

இதையடுத்து ஒரு ரன்னில் சென்னை அணி தோல்வியை தழுவியது. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை மும்பை அணி வென்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories