December 5, 2025, 9:11 PM
26.6 C
Chennai

மோடி ஆட்சி போனால்… நான் இந்தியாவுக்கு திரும்புவேன்: இந்து வெறுப்பு மதபோதகர் ஜாஹிர் நாயக்!

 

ஆட்சி மாற்Zakir Naik - 2025றம் ஏற்பட்டால் இந்தியாவுக்கு திரும்பத் தயாராக உள்ளேன் என்று, இந்து மத வெறுப்பை முன்னிலைப் படுத்தும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் அறிவித்துள்ளார். மோடி அரசை விட காங்கிரஸ் அரசு குறைந்த தீமையை செய்யக் கூடியது என்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்றவர் ஜாகிர் நாயக்! இவர் பின்னர் மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிட்டார். ஜாகிர் நாயக்குக்கு எதிராக மலேசியாவில் தமிழர்கள், இந்தியர்கள் என சிலர் ஆர்ப்பாட்டங்களைச் செய்து, அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், ஜாஹிர் நாயக், ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், தம்மை கைது செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் இந்தியாவுக்குத் திரும்புவதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை என்று கூறினார்.

மேலும், காங்கிரஸும் தீமை செய்யும் பிசாசுதான். ஆனால் இரு பிசாசுகளில் காங்கிரஸ் குறைந்த தீமை செய்யும் பிசாசு என்று குறிப்பிட்ட ஜாஹிர் நாயக், காங்கிரஸ், பாஜக.,வை விட அதிக ஹிந்துத் தன்மை கொண்டது என்று சாடினார்.

பாஜக., ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசை எதிர்த்துப் பேசினால், நீதி கிடைக்க 80 சத வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது, 10-20 சத வாய்ப்புதான் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் ஜாஹிர் நாயக்.

ஜாஹிர் நாயக்கின் வெளிநாட்டு நிதி மோசடி குறித்து அமலாக்கத்துறை கடந்த 2016ஆம் ஆண்டில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. சமூகத்தில் பிளவை உண்டாக்கும் வெறுப்புப் பேச்சுகளை போதனை செய்ததுடன், ரூ.193 கோடிக்கு ஜாஹிர் நாயக் முறைகேடு செய்ததை அம்பலப் படுத்தியது. மேலும், ரூ.50.5 கோடி மதிப்பில் சென்னையில் இஸ்லாமிக் இண்டர்நேஷனல் ஸ்கூல் சொத்துகள், 10 பிளாட்கள், 3 குடோன்கள், 3 கட்டடங்கள், புனேயில் உள்ள நிலம், மும்பை நிலம், 10 வங்கி கணக்குகள் என அனைத்தையும் அமலாக்கத்துறை வெளிக் கொண்டு வந்தது.

இதனிடையே, ஜாகிர் நாயக்கை மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் புகழ்ந்ததை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் தூண்டப்பட்டு டாக்காவில் தாக்குதல் நடத்தியதாக பயங்கரவாதிகள் வாக்குமூலம் அளித்ததை சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளுக்கு நண்பனாக விளங்குவதாக சாடினார்.

1 COMMENT

  1. அது என்ன ஹிந்து மத வெறுப்பு மத போதகர்..அவர் எப்போது ஹிந்து வை வெறுத்து பேசி இருக்கிறார்..கூறவும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories