கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

badrinath modi2 - 2026உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.

நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலையுடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. அதற்கு சற்று முன்னர், செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு, பின்னர்,தனது இரு நாள் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கிவிட்டார் பிரதமர் மோடி.

தனக்கு மிகவும் விருப்பமான இமயமலையின் ஜோதிர்லிங்கத் தலமான கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து இன்று காலை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்துக்கும் சென்று வழிபட்டார் பிரதமர் மோடி!

பாரம்பரிய உடை அணிந்து, கேதர்நாத் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ஆன்மிக அதிர்வலைகள் நிறைந்த பனிக்குகையில் இரவு முழுதும் தியானம் செய்தார். இதை முன்னிட்டு, அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை தியானம் முடிந்து குகையை விட்டு வெளியில் வந்தார் மோடி.

கேதார்நாத்தில் கோவிலுக்கு வெளியே திரண்டிருந்த பக்தர்களை பார்த்து கையசைத்த வண்ணம் தனடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் மோடி.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

பின்னர் அவர் கேதார்நாத்தில் கூடியிருந்த செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு அதிகாரிகள் எவரும் அருகில் இன்றி, பத்திரிகையாளர்களுடன் அவர் பேசினார்.kedarnath modi - 2026

அப்போது அவர், தாம் செய்த பணிகளை எண்ணிப் பார்க்கும் வகையில், தனிமையில் 2 நாட்களை கழிப்பதற்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆன்மிக ஒளியூட்டப்பட்ட புனித தலங்களுக்கு செல்வதை பெருமையாக கருதுவதாகத் தெரிவித்த அவர், அன்றாட நாட்டு நடப்புகளில் இருந்து இரு நாட்கள் சற்று விலகியிருந்து, ஆன்மீக பயணமாக உத்தராகண்ட் வந்துள்ளேன். எனக்காக எதையும் கேட்டு கோவிலுக்கு செல்வதில்லை. கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். எனக்கும் கேதர்நாத்துக்கும் ஓர் உணர்வுப்பூர்வான உறவு உள்ளது.

கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றிக் கொண்டிருக் கிறேன். காணொலிக் காட்சி மூலம் எனக்கான தகவல்களை நான் சேகரித்து வருகிறேன். மன அமைதி பெற கேதார்நாத்துக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும். எனக்காக எதையும் கேட்டு கோவிலுக்குச் செல்வதில்லை!

வெளிநாடுகளுக்கு செல்வதில் தவறில்லை என்றாலும், உள்நாட்டிலும் எல்லா இடங்களையும் மக்கள் சுற்றிப் பார்க்க வேண்டும்! என்றார் பிரதமர் மோடி.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தேர்தல் வெற்றிக்காகக்கூட பிரார்த்திக்கவில்லையா என கேட்டனர். இல்லை என பதிலளித்த அவர், இறைவன் நமக்கு எல்லாவற்றையும் வழங்கியிருப்பதாக நம்புகிறேன்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கடவுளின் ஆசிகள் இருக்க வேண்டும் என்பதே தமது பிரார்த்தனை!.

கேதார்நாத்திற்கும் தனக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட மோடி, 2013ஆம் ஆண்டு பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகு கேதார்நாத் மறுசீரமைப்புக்கு திட்டம் தீட்டியதாக கூறினார்.badrinath modi - 2026

மக்கள் அனைவரும் நாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றும் கூறிய பிரதமர், வெளிநாடுகளுக்கு செல்வது தவறில்லை என்றாலும், உள்நாட்டிலும் வெவ்வேறு இடங்களுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கேதாரத்தில் இருந்து பத்ரியை நோக்கிப் புறப்பட்டார். இன்று காலை பத்ரிநாராயணர் கோவிலுக்கும் சென்று வழிபட்டார் பிரதமர் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories