மே 30: மோதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்!

pmmodi met president - 2026

மே 30ஆம் தேதி நரேந்திர மோதிக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெயரில் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் மே 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் செய்து வைக்கிறார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் முடிவால் பெரும் மனநிம்மதி அடைந்தவர் குடியரசுத் தலைவர் என்று செய்திகள் வெளியாயின. காரணம், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற போது, ஒவ்வொரு கட்டத்திலும் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிய விதம், தேர்தக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் இவை எல்லாம் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்றும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறிக் கொண்டிருந்தன.

இதனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது, சட்டத்தின் வழியில் நடப்பது என்பது குறித்த ஆவணங்களை எல்லாம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்த்துக் கொண்டிருந்தாராம். மேலும், பிரச்னை ஏற்படும் என்று இருந்தால், அந்த நேரத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் அவர் படித்துக் கொண்டிருந்தாராம்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான மே 23ம் தேதி காலையே, குடியரசுத் தலைவருக்கு மன நிம்மதி ஏற்பட்டதாகவும் தனக்கு சிக்கல் எதுவும் ஏற்படாமல் அதிக வேலையின்றி மக்கள் தீர்ப்பு அமைந்துவிட்டது என்றும் நிம்மதி அடைந்ததாகவும் கூறப் படுகிறது.

இந்நிலையில் வரும் மே 30 ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது. கடந்த மே 23 வியாழன் அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. மே 30 வியாழன் அன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories