மே 30: மோதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்!

pmmodi met president - 2026

மே 30ஆம் தேதி நரேந்திர மோதிக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெயரில் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் மே 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் செய்து வைக்கிறார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் முடிவால் பெரும் மனநிம்மதி அடைந்தவர் குடியரசுத் தலைவர் என்று செய்திகள் வெளியாயின. காரணம், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற போது, ஒவ்வொரு கட்டத்திலும் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிய விதம், தேர்தக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் இவை எல்லாம் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்றும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறிக் கொண்டிருந்தன.

இதனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது, சட்டத்தின் வழியில் நடப்பது என்பது குறித்த ஆவணங்களை எல்லாம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்த்துக் கொண்டிருந்தாராம். மேலும், பிரச்னை ஏற்படும் என்று இருந்தால், அந்த நேரத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் அவர் படித்துக் கொண்டிருந்தாராம்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான மே 23ம் தேதி காலையே, குடியரசுத் தலைவருக்கு மன நிம்மதி ஏற்பட்டதாகவும் தனக்கு சிக்கல் எதுவும் ஏற்படாமல் அதிக வேலையின்றி மக்கள் தீர்ப்பு அமைந்துவிட்டது என்றும் நிம்மதி அடைந்ததாகவும் கூறப் படுகிறது.

இந்நிலையில் வரும் மே 30 ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது. கடந்த மே 23 வியாழன் அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. மே 30 வியாழன் அன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories