மே 30: மோதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்!

pmmodi met president - 2026

மே 30ஆம் தேதி நரேந்திர மோதிக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெயரில் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் மே 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் செய்து வைக்கிறார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் முடிவால் பெரும் மனநிம்மதி அடைந்தவர் குடியரசுத் தலைவர் என்று செய்திகள் வெளியாயின. காரணம், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற போது, ஒவ்வொரு கட்டத்திலும் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிய விதம், தேர்தக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் இவை எல்லாம் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்றும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறிக் கொண்டிருந்தன.

இதனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது, சட்டத்தின் வழியில் நடப்பது என்பது குறித்த ஆவணங்களை எல்லாம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்த்துக் கொண்டிருந்தாராம். மேலும், பிரச்னை ஏற்படும் என்று இருந்தால், அந்த நேரத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் அவர் படித்துக் கொண்டிருந்தாராம்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான மே 23ம் தேதி காலையே, குடியரசுத் தலைவருக்கு மன நிம்மதி ஏற்பட்டதாகவும் தனக்கு சிக்கல் எதுவும் ஏற்படாமல் அதிக வேலையின்றி மக்கள் தீர்ப்பு அமைந்துவிட்டது என்றும் நிம்மதி அடைந்ததாகவும் கூறப் படுகிறது.

இந்நிலையில் வரும் மே 30 ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது. கடந்த மே 23 வியாழன் அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. மே 30 வியாழன் அன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories