உதவியாளரின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்ற ஸ்ம்ருதி இரானி!

Smriti Irani Amethi BJP Leader Murder Funeral Procession - 2026

அடையாளம் தெரியாத நபர்களால் சனிக்கிழமை நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட பாஜக., தொண்டரும் அமேதியில் தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்தவருமான சுரேந்தர் சிங்கின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் ஸ்மிருதி இரானி.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பாஜக., தொண்டரான சுரேந்தர் சிங், அங்கெ பாஜக., சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்காக கடுமையாக பிரசாரம் செய்தார்.smriti irani in amethi - 2026

அமேதி தொகுதியில் காலணிகள் வாங்கக் கூட வசதியற்ற நிலையில் மக்கள் பலர் இருப்பதாக ஒரு கூட்டத்தில் பேசப் பட்ட நிலையில், அங்குள்ள மக்களுக்கு காலணிகள் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்தார் ஸ்மிருதி இரானி. தேர்தலுக்கு முன்னர் பெருமளவில் காலணிகள் அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப் பட்டன. இந்த நடவடிக்கையில், சுரேந்தர் சிங் தன்னுடைய பொறுப்பில் பலருக்கு காலணிகளை விநியோகம் செய்து, அங்குள்ள மக்களிடம் நல்ல பெயரை ஏற்படுத்தினார்.

அதே நேரம், பிரியங்கா ராபர்ட் வதேரா இதை விமர்சித்தார். இது ராகுலை அவமதிப்பதற்காக செய்யப் படுவது என்றார்.

கிராமத் தலைவராக இருந்து அதை விட்டு வெளியில் வந்து, ஸ்மிருதி இரானிக்காக தேர்தல் பணி செய்த சுரேந்தர் சிங், பர்லியா கிராமத்தில் பாஜக.,வின் தேர்தல் வெற்றியை கொண்டாடினார்.

smriti close aid surendrasingh - 2026இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். படுகாயம் அடைந்த சுரேந்தர் சிங் லக்னௌ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் போலீஸாரால் கைது செய்யப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

சுரேந்தர் சிங் கொல்லப்பட்ட தகவல் அறிந்த ஸ்மிருதி இரானி அமேதிக்கு விரைந்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, கண்ணீர் மல்க சுரேந்தரின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.

இதனிடையே, சுரேந்தர் சிங்கின் கொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதே நேரம், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி,’ சுரேந்தர் சிங்கை சுட்டது யார், அவரைச் சுடச் சொன்னது யார் என கண்டுபிடித்து அந்தக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைகூட பெற்றுத் தருவேன்” என்று கோபத்துடன் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories