உதவியாளரின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்ற ஸ்ம்ருதி இரானி!

Smriti Irani Amethi BJP Leader Murder Funeral Procession - 2026

அடையாளம் தெரியாத நபர்களால் சனிக்கிழமை நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட பாஜக., தொண்டரும் அமேதியில் தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்தவருமான சுரேந்தர் சிங்கின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் ஸ்மிருதி இரானி.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பாஜக., தொண்டரான சுரேந்தர் சிங், அங்கெ பாஜக., சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்காக கடுமையாக பிரசாரம் செய்தார்.smriti irani in amethi - 2026

அமேதி தொகுதியில் காலணிகள் வாங்கக் கூட வசதியற்ற நிலையில் மக்கள் பலர் இருப்பதாக ஒரு கூட்டத்தில் பேசப் பட்ட நிலையில், அங்குள்ள மக்களுக்கு காலணிகள் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்தார் ஸ்மிருதி இரானி. தேர்தலுக்கு முன்னர் பெருமளவில் காலணிகள் அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப் பட்டன. இந்த நடவடிக்கையில், சுரேந்தர் சிங் தன்னுடைய பொறுப்பில் பலருக்கு காலணிகளை விநியோகம் செய்து, அங்குள்ள மக்களிடம் நல்ல பெயரை ஏற்படுத்தினார்.

அதே நேரம், பிரியங்கா ராபர்ட் வதேரா இதை விமர்சித்தார். இது ராகுலை அவமதிப்பதற்காக செய்யப் படுவது என்றார்.

கிராமத் தலைவராக இருந்து அதை விட்டு வெளியில் வந்து, ஸ்மிருதி இரானிக்காக தேர்தல் பணி செய்த சுரேந்தர் சிங், பர்லியா கிராமத்தில் பாஜக.,வின் தேர்தல் வெற்றியை கொண்டாடினார்.

smriti close aid surendrasingh - 2026இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். படுகாயம் அடைந்த சுரேந்தர் சிங் லக்னௌ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் போலீஸாரால் கைது செய்யப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

சுரேந்தர் சிங் கொல்லப்பட்ட தகவல் அறிந்த ஸ்மிருதி இரானி அமேதிக்கு விரைந்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, கண்ணீர் மல்க சுரேந்தரின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.

இதனிடையே, சுரேந்தர் சிங்கின் கொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதே நேரம், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி,’ சுரேந்தர் சிங்கை சுட்டது யார், அவரைச் சுடச் சொன்னது யார் என கண்டுபிடித்து அந்தக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைகூட பெற்றுத் தருவேன்” என்று கோபத்துடன் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories