உதவியாளரின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்ற ஸ்ம்ருதி இரானி!

Smriti Irani Amethi BJP Leader Murder Funeral Procession - 2026

அடையாளம் தெரியாத நபர்களால் சனிக்கிழமை நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட பாஜக., தொண்டரும் அமேதியில் தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்தவருமான சுரேந்தர் சிங்கின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் ஸ்மிருதி இரானி.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பாஜக., தொண்டரான சுரேந்தர் சிங், அங்கெ பாஜக., சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்காக கடுமையாக பிரசாரம் செய்தார்.smriti irani in amethi - 2026

அமேதி தொகுதியில் காலணிகள் வாங்கக் கூட வசதியற்ற நிலையில் மக்கள் பலர் இருப்பதாக ஒரு கூட்டத்தில் பேசப் பட்ட நிலையில், அங்குள்ள மக்களுக்கு காலணிகள் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்தார் ஸ்மிருதி இரானி. தேர்தலுக்கு முன்னர் பெருமளவில் காலணிகள் அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப் பட்டன. இந்த நடவடிக்கையில், சுரேந்தர் சிங் தன்னுடைய பொறுப்பில் பலருக்கு காலணிகளை விநியோகம் செய்து, அங்குள்ள மக்களிடம் நல்ல பெயரை ஏற்படுத்தினார்.

அதே நேரம், பிரியங்கா ராபர்ட் வதேரா இதை விமர்சித்தார். இது ராகுலை அவமதிப்பதற்காக செய்யப் படுவது என்றார்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

கிராமத் தலைவராக இருந்து அதை விட்டு வெளியில் வந்து, ஸ்மிருதி இரானிக்காக தேர்தல் பணி செய்த சுரேந்தர் சிங், பர்லியா கிராமத்தில் பாஜக.,வின் தேர்தல் வெற்றியை கொண்டாடினார்.

smriti close aid surendrasingh - 2026இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். படுகாயம் அடைந்த சுரேந்தர் சிங் லக்னௌ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் போலீஸாரால் கைது செய்யப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

சுரேந்தர் சிங் கொல்லப்பட்ட தகவல் அறிந்த ஸ்மிருதி இரானி அமேதிக்கு விரைந்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, கண்ணீர் மல்க சுரேந்தரின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.

இதனிடையே, சுரேந்தர் சிங்கின் கொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதே நேரம், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி,’ சுரேந்தர் சிங்கை சுட்டது யார், அவரைச் சுடச் சொன்னது யார் என கண்டுபிடித்து அந்தக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைகூட பெற்றுத் தருவேன்” என்று கோபத்துடன் கூறினார்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories