ராஜினாமா… ராஜினாமா.. ராஜினாமாவேதான்! அடம் பிடிக்கிறாராம் ராகுல்!

Rahul and chidu - 2026 காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை ஏற்க காங்கிரஸ் காரியக் கமிட்டி  நிராகரித்த போதிலும், தாம் பதவி விலகும் முடிவிலிருந்து மாறப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார் … .

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற படுதோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக ராகுல் கூறியிருந்தார்.

ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டியில் கட்சி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராகுலின் முடிவை நிராகரித்தனர்

எனவே ராகுல் ராஜினாமா முடிவு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாயின இருப்பினும் இது ஒரு நாடகம் என்று சமூக வலைதளங்களிலும் அரசியல் மட்டத்திலும் கேலி செய்யப்பட்டது

இந்நிலையில் ராகுல் ராஜினாமா செய்ய முன் வந்தார் என்பதும் நிர்வாகிகள் அதை ஏற்க மறுத்தார்கள் என்பதும் தவறான தகவல் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியிருந்தார்

இந்நிலையில் ராகுல் தனது முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றும் ராஜினாமா செய்தே தீருவது என்று உறுதியாக இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன

இதை தொடர்ந்து சோனியா குடும்பத்தை சேராத ஒருவரை புதிய தலைவராக தேர்வு செய்யும்படி கட்சியினரிடம் ராகுல் கூறி உள்ளாகவும், தேர்தல் தோல்விக்கு ராகுல் காரணம் என்று கட்சி நிர்வாகிகளோ அல்லது கட்சி நிர்வாகிகள் காரணம் என்று மீது ராகுலோ குற்றம் சாட்டவில்லை என்று  கூறப்படுகிறது.

ராகுலின் இந்த முடிவிற்கு சோனியா, பிரியங்கா உள்ளிட்டோரும் ஒப்புதல் தெரிவித்து விட்டனராம்

இதனால் புதிய தலைவரை தேர்வு செய்யும்படி கட்சி நிர்வாகிகளிடம் ராகுல் கூறி உள்ளாராம்

இது குறித்து  காங்கிரஸ் காரிய கமிட்டி  கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் வெறும் பேச்சுக்கு கூறவில்லை. அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.

rahul gandhi - 2026கட்சியினரிடம் அவர் கூறுகையில், நேரு – இந்திரா குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தான் கட்சித் தலைமைக்கு தேவை என்றில்லை. எங்கள் குடும்பத்தைச் சேராத ஒருவரிடம் கட்சி தலைமையை ஒப்படைக்க நினைக்கிறேன். நான் எங்கும் சென்று விடப் போவதில்லை. தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக போராடுவேன் என உறுதியாகக் கூறினார் என்று அந்த தலைவர் கூறினாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories