ஜெகன் உள்ளே..! திருப்பதி கோவில் சேனலின் சேர்மன் வெளியே..!

Published:

svbc chairman - 2026ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் எஸ்விபிசி சேர்மன் பதவியில் இருந்து, திரைப்பட இயக்குனர் கே ராகவேந்திர ராவ் ராஜினாமா செய்துள்ளார்! அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆலய செயல் அதிகாரிக்கும் அரசாங்கத்துக்கும் அனுப்பியுள்ளார்.

எஸ்விபிசி – ஸ்ரீவேங்கடேஸ்வரா பக்தி சேனலின் சேர்மனாக பதவி வகித்து வரும் ராகவேந்திர ராவ், வயது முதிர்வு காரணமாக பதவி விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். திருமலா திருப்பதி தேவஸ்தானம் டிடிடி நிர்வாகத்திற்கும் அலுவலர்களுக்கும் ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்வாமியின் ஆசிகள் எப்போதும் இருக்க வேண்டுமென்று பிரார்த்திப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்!

svbc chairman1 - 2026கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி ராகவேந்திர ராவ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மனாக நியமிக்கப்பட்டார்! 2015 முதல் தேவஸ்தான தர்மகர்த்தாக்கள்  மண்டலியில் மெம்பராக இருந்துள்ளார். எஸ்விபிசி சேனலுக்கு இதற்கு முன் சேர்மனாக இருந்த நரசிம்ம ராவின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததன் காரணமாக அவரை நீக்கிவிட்டு 2018ல் ராகவேந்திரராவ் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

சேனல் டைரக்டராக பொறுப்பேற்று நடத்தி வந்த அவரை அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுரைக்கேற்ப டிடிடி சேனல் சேர்மனாக நியமித்தது.

ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவி ஏற்கப் போகும் பின்னணியில் ராகவேந்திர ராவ் ராஜினாமா செய்தது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது! ஜெகன் மோகன் ரெட்டியின் நிர்வாகத்தில் திருப்பதி ஆலய நிர்வாகம் சீர்கேடைச் சந்திக்கும் என்ற அச்சம் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களிடையே நிலவுகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img