திருமலை கெஸ்ட் ஹவுஸில் மது, மாது, சல்லாபம், லஞ்சம்…: வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மன் ராஜினாமா!

svbc pritvi - 2026

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மன்… திரைப்பட காமெடியன் பிரித்விராஜ் ராஜினாமா.

சற்றுமுன் ஹைதராபாத் சோமாஜிகுடா பிரஸ்மீட்டில் தன் ராஜினாமாவை வெளியிட்டார்.

எஸ்விபிசி சேர்மன் பிரித்திவிராஜ் உடனே பதவி விலக வேண்டும் என்று தீவிர விமர்சனம் எழுந்தது.

எஸ்விபிசி சேர்மன் பிரித்திவிராஜ் பெண் ஊழியரோடு செய்த சரச சல்லாபம் தொடர்பான ஆடியோ ஊடகங்களில் வைரல் ஆனதன் பலனாக பரபரப்பு.

எஸ்விபிசி ஊழியர் சங்க கவுரவத் தலைவர் ‘கந்தாரபு’ முரளி தீவிரமாக பிருத்வி பற்றி விமர்சித்தார்.

பிரத்விரஜ் என்ற காமுகனை எஸ்விபிசி சேர்மனாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு நியமித்தது. ஊழியர்களை ஆபாசமாக திட்டுவதும் பெண் ஊழியர்களை வேதனைக்கு உள்ளாக்குவதும் அவருக்கு வழக்கமாக உள்ளது. இனி ஒரு கணமும் அவர் எஸ்விபிசியில் பணிசெய்ய அருகதை அற்றவர் என்று விமர்சித்தார்.

எஸ்விபிசி சேர்மனாக விசிஆர் அறைக்குள் வந்து பெண்களை பின்புறமாக அணைப்பேன் என்று பிருத்வி கூறுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

svbc pritvi1 - 2026

வேலை வாங்கித் தருவதாக 36 பேரிடமிருந்து லட்சங்களை வசூலித்துள்ளார் என்றார் . பத்மாவதி கெஸ்ட் ஹவுஸில் அமர்ந்து மது அருந்தியதாக ப்ருத்வி மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பவித்திரமான திருமலையில் பத்மாவதி கெஸ்ட் ஹவுசில் அமர்ந்து மது அருந்தியது, பெண் ஊழியரோடு சல்லாபத்தில் ஈடுபட்ட ஆடியோ வைரலானது, வேலை தருவதாக கூறி லஞ்சம் வாங்கியது என்று ப்ருத்வி பெயரில் பல குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் பிரித்திவிராஜ் மேலிட உத்தரவுப்படி பதவி விலகியுள்ளார்.

டிடிடி சேர்மன் சுப்பாரெட்டி தலையிட்டு ப்ருத்விராஜ் நியமித்த முப்பத்தி ஆறு பேரில் 30 பேரை வேலையில் இருந்து நீக்கினார். பிரித்திவிராஜ் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து டிடிடி விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சுப்பாராவ் உத்தரவிட்டார்.

‘ஜகன் உத்தரவுக்கு மதிப்பளித்து சேர்மன் பதவியில் இருந்து விலகுகிறேன். குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் என்னை செருப்பால் அடியுங்கள்’ என்று செருப்பைத் தூக்கிக் காட்டினார் ப்ருத்வி.

svbc pritviraj - 2026

சற்றுமுன் ஹைதராபாத் சோமாஜிகுடா பிரஸ் கிளப்பில் மீடியாவிடம் பேசிய பிரிதிவிராஜ் ஆவேசமாக காணப்பட்டார்.

” இப்போதே டாக்டரை வரவழைத்து வந்து ரத்தப் பரிசோதனை செய்யுங்கள். நான் குடிகாரன் என்பது நிரூபணமானால் செருப்பால் அடியுங்கள். ஜகன் முதலமைச்சராக வேண்டும் என்ற தீட்சை இருந்தேன். எல்லா பழக்கங்களையும் விட்டு விட்டேன். சனிக்கிழமையில் இருந்து நல்ல தண்ணீர் கூட குடிக்கவில்லை. நான் மிகுந்த மன வேதனையில் உள்ளேன்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories