மோதிக்கு கூழாங்கல் அனுப்புவேன் என்றார் மம்தா! இனிப்பை ஊட்டி விட்டார் பிரணாப் முகர்ஜி!

modi pranab - 2026

மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோதிக்கு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரும் குடியரசுத் தலைவராக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி ரசகுல்லா இனிப்பு ஊட்டி விட்டு, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோதி மீண்டும் பிரதமராக நாளை பதவி ஏற்கிறார். அதற்கு முன், மகான்கள், மூத்த தலைவர்களின் ஆசிகளை நாடி அவர்களைச் சந்தித்து வருகிறார்.

அந்த வரிசையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குச் சென்றார் மோதி. அவரை வரவேற்ற பிரணாப் முகர்ஜி, அவருக்கு கோல்கத்தா இனிப்பினை வாயில் ஊட்டி விட்டு, வாழ்த்து தெரிவித்தார். இந்தப் புகைப்படத்தை பிரதமர் மோதி டிவிட்டரில் வெளியிட்டார்.

தனது டிவிட்டர் பதிவில் அந்தப் புகைப்படத்துடன் அவர் குறிப்பிட்டுள்ள கருத்தில்… பிரணாப் முகர்ஜி மிகச் சிறந்த ராஜதந்திரி. அவரை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரும் விஷயம். அவரது பொது அறிவும் வியூகங்களும் அபாரமானவை. அவரது ஆசியை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோதியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. கூடுதல் பலத்துடன் அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதற்கு வாழ்த்துக்கள். அவரது எண்ணம் தொலைநோக்கு பார்வை ஆகியவை நிறைவேற வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி கோல்கத்தா இனிப்பை மோதிக்கு ஊட்டி விடும் அதே வேளையில், முன்னர் மம்தா பானர்ஜி கூறிய கருத்தை அந்த டிவிட்டர் பதிவுகளில் சிலர் பின்னூட்டம் இட்டிருந்தனர். கூழாங்கல்லும் சகதியும் மோதிக்கு அனுப்புவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். ஆனாலும் பிரணாப் முகர்ஜி போல் மேற்கு வங்கம் மோதிக்கு இனிப்பைத்தான் ஊட்டியிருக்கிறது என்று கருத்துகள் பகிரப் படுகின்றன!

1 COMMENT

  1. செல்வி மம்தா பானெர்ஜி திரு மோடிக்கு அனுப்புவதாக சொல்லி இருந்த அதே கூழாங்கல்லால் தன்னை அடித்துக்கொள்ள வேண்டும். சகதியை தன் மேல் பூசிக்கொள்ள வேண்டும். செய்வாரா? இந்த லட்சணத்தில் மம்தா, மோடி அவர்களின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கிறாராம். மானம் ரோஷம் உள்ளவரானால் அங்கே போக்க கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories