December 5, 2025, 6:03 PM
26.7 C
Chennai

மோதிக்கு கூழாங்கல் அனுப்புவேன் என்றார் மம்தா! இனிப்பை ஊட்டி விட்டார் பிரணாப் முகர்ஜி!

modi pranab - 2025

மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோதிக்கு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரும் குடியரசுத் தலைவராக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி ரசகுல்லா இனிப்பு ஊட்டி விட்டு, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோதி மீண்டும் பிரதமராக நாளை பதவி ஏற்கிறார். அதற்கு முன், மகான்கள், மூத்த தலைவர்களின் ஆசிகளை நாடி அவர்களைச் சந்தித்து வருகிறார்.

அந்த வரிசையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குச் சென்றார் மோதி. அவரை வரவேற்ற பிரணாப் முகர்ஜி, அவருக்கு கோல்கத்தா இனிப்பினை வாயில் ஊட்டி விட்டு, வாழ்த்து தெரிவித்தார். இந்தப் புகைப்படத்தை பிரதமர் மோதி டிவிட்டரில் வெளியிட்டார்.

தனது டிவிட்டர் பதிவில் அந்தப் புகைப்படத்துடன் அவர் குறிப்பிட்டுள்ள கருத்தில்… பிரணாப் முகர்ஜி மிகச் சிறந்த ராஜதந்திரி. அவரை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரும் விஷயம். அவரது பொது அறிவும் வியூகங்களும் அபாரமானவை. அவரது ஆசியை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோதியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. கூடுதல் பலத்துடன் அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதற்கு வாழ்த்துக்கள். அவரது எண்ணம் தொலைநோக்கு பார்வை ஆகியவை நிறைவேற வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி கோல்கத்தா இனிப்பை மோதிக்கு ஊட்டி விடும் அதே வேளையில், முன்னர் மம்தா பானர்ஜி கூறிய கருத்தை அந்த டிவிட்டர் பதிவுகளில் சிலர் பின்னூட்டம் இட்டிருந்தனர். கூழாங்கல்லும் சகதியும் மோதிக்கு அனுப்புவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். ஆனாலும் பிரணாப் முகர்ஜி போல் மேற்கு வங்கம் மோதிக்கு இனிப்பைத்தான் ஊட்டியிருக்கிறது என்று கருத்துகள் பகிரப் படுகின்றன!

1 COMMENT

  1. செல்வி மம்தா பானெர்ஜி திரு மோடிக்கு அனுப்புவதாக சொல்லி இருந்த அதே கூழாங்கல்லால் தன்னை அடித்துக்கொள்ள வேண்டும். சகதியை தன் மேல் பூசிக்கொள்ள வேண்டும். செய்வாரா? இந்த லட்சணத்தில் மம்தா, மோடி அவர்களின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கிறாராம். மானம் ரோஷம் உள்ளவரானால் அங்கே போக்க கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories