ஆஸ்திரேலியாவின் வெற்றி நடையைத் தடுத்த இந்தியா! 2வது வெற்றி!

indian team - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த 14வது லீக் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தான் சந்தித்த இரண்டாவது போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் சுற்றுப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இந்திய அணி.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா நிதானமாக ஆடி, 57 ரன்னில் ஆட்டமிழந்தார். 109 பந்துகளை சந்தித்த தவான், 16 பவுண்டரியுடன் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி 82 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டி, 27 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். தோனி 14 பந்துகளில் 27 ரன்னும், ராகுல் 11 ரன்னும் எடுத்தனர். இதனால், 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன் எடுத்தது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

indvsaus - 2026353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியினர், இந்திய வீரர்களின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர். 13 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 60 ரன் சேர்த்த ஆஸ்திரேலிய அணி, பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது.

ஆரோன் பிஞ்ச் 36 ரன், வார்னர் 56 ரன், ஸ்டீவன் சுமித் 69 ரன். கவாஜா 42 ரன் விளாசி என நல்ல ரன்களை எடுத்தனர். பின்னர் ஸ்டாய்னிஸ் 0, மேக்ஸ்வெல் 28 என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் தடுமாறியது ஆஸ்திரேலிய அணி.
அலெக்ஸ் கேரி மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 55 ரன் எடுத்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் 316 ரன் எடுத்த அந்த அணி, 36 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகனாக, 117 ரன் குவித்த ஷிகர் தவான் அறிவிக்கப் பட்டார். இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றி நடை தடுக்கப் பட்டது. இந்தியா தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories