ஆஸ்திரேலியாவின் வெற்றி நடையைத் தடுத்த இந்தியா! 2வது வெற்றி!

indian team - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த 14வது லீக் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தான் சந்தித்த இரண்டாவது போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் சுற்றுப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இந்திய அணி.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா நிதானமாக ஆடி, 57 ரன்னில் ஆட்டமிழந்தார். 109 பந்துகளை சந்தித்த தவான், 16 பவுண்டரியுடன் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி 82 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டி, 27 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். தோனி 14 பந்துகளில் 27 ரன்னும், ராகுல் 11 ரன்னும் எடுத்தனர். இதனால், 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன் எடுத்தது.

ALSO READ:  T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

indvsaus - 2026353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியினர், இந்திய வீரர்களின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர். 13 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 60 ரன் சேர்த்த ஆஸ்திரேலிய அணி, பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது.

ஆரோன் பிஞ்ச் 36 ரன், வார்னர் 56 ரன், ஸ்டீவன் சுமித் 69 ரன். கவாஜா 42 ரன் விளாசி என நல்ல ரன்களை எடுத்தனர். பின்னர் ஸ்டாய்னிஸ் 0, மேக்ஸ்வெல் 28 என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் தடுமாறியது ஆஸ்திரேலிய அணி.
அலெக்ஸ் கேரி மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 55 ரன் எடுத்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் 316 ரன் எடுத்த அந்த அணி, 36 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகனாக, 117 ரன் குவித்த ஷிகர் தவான் அறிவிக்கப் பட்டார். இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றி நடை தடுக்கப் பட்டது. இந்தியா தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories