பத்திரிகை அடித்து… ஊர்கூடி… மேளதாளத்துடன் தவளைக் கல்யாணம்!

Published:

IMG 20190610 WA0013 - 2026

மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம்…. திருமண பத்திரிக்கை கூட ரெடி ….

இயற்கை சக்திகளை மகிழ்வித்து மழை பொழிவிக்க வேண்டு மென்றால் வருண யாகம் செய்வது, தவளைகளுக்கு திருமணம் செய்வது, ஊரைக் கூட்டி விருந்து அளிப்பது, கபடி ஆடுவது, பாட்டு பாடுவது போன்றவற்றை செய்வது வழக்கமாக உள்ளது .

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்வித்தால் மழை பொழியும் என்று நம்புபவர்கள் உள்ளார்கள்.

தவளைகளுக்குத் திருமணம் செய்வித்தால் தேவேந்திரன் கருணை கொண்டு சோ வென்று மழை பொழிய வைப்பான் என்று இத்தகைய திருமணங்களை நடத்தி வருகிறார்கள்.

IMG 20190610 WA0015 1 - 2026ஆனால் அவர்கள் மீது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு கூட பதிவு செய்யப்படுகிறது. புதிதாக கர்நாடகாவில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.

தவளை திருமணத்திற்கு கிராண்டாக பத்திரிக்கை அடித்து விநியோகித்தார்கள்.

உடுப்பி மாவட்டம் நாகரீக சமிதி டிரஸ்ட் பஞ்சரத்ன சேவா டிரஸ்ட் முன்னின்று இதனை நடத்தியது.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

உடுப்பி கிதியூர் ஹோட்டல் வளாகத்தில் சனிக்கிழமை திருமணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. காலை 11 மணிக்கு மாருதி வேதிகாவிலிருந்து கல்யாண வீட்டார் ஊர்வலமாக கிளம்பினார்.

ஊர்வலம் பழைய டயானா சர்க்கிளிலிருந்து கவி முத்தணா மார்க்கம் வழியாக உடுப்பி கிதியூர் ஹோட்டலை வந்தடைந்தது. அதன்பின் தவளைக் கல்யாணம் நடந்தேறியது.

இந்து சம்பிரதாய சாஸ்திர முறைப்படி கல்யாணத்தை நடத்தினார்கள்.

தவளைகளுக்கு பெண் மாப்பிள்ளை அலங்காரம் செய்து தாலி கட்டி மாலை மாற்றி சப்தபதி எல்லாம் குறைவின்றி நடத்தினர்.

பெரிய அளவில் மக்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி விருந்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img