பிரதமர் மோதிக்கு பரிசு கொடுத்து அசத்த எண்ணி… அசடு வழிந்த அதிகாரிகள்!

IMG 20190610 WA0014 - 2026

திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிக உற்சாகம் காட்டி…. பிரதமர் மோடிக்காக புராதன நாணயங்களால் நினைவுப் பரிசு தயாரித்தளிக்க ஆர்வம் காட்டினார்கள்.

திருமலையில் தரிசனத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரத்தியேக காணிக்கை அளிப்பதற்கு முடிவெடுத்தனர் டிடிடி அதிகாரிகள்! ஆனால் ….அந்த விஷயம் வெளியே பரவியதால் பின்வாங்கிவிட்டனராம்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக திருமலை பாலாஜியை தரிசிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தார். அவருக்கு ஒரு அரிதான அன்பளிப்பு பரிசு அளித்து கௌரவிக்க டிடிடி அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக செய்தி கசிந்தது.

புராதன நாணயங்களால் அதனை தயாரிப்பதற்கு முயற்சிப்பதாக கூறப்பட்டு அது மீடியாவில் விவாதத்திற்கு இடமானது.

டிடிடி அதிகாரிகள் திருமலா மியூசியத்திலிருந்து 14ஆம் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன நாணயங்களையும் பலவித வடிவங்களில் உள்ள சில மாதிரிகளையும் பயன்படுத்தி ஒரு நினைவுப் பரிசை தயாரிக்கும் வேலையை வெளிநபர்களிடம் ஒப்படைத்தார்கள்.

இது தொடர்பாக சனிக்கிழமையே அவர்களிடம் நாணயங்களை ஒப்படைத்தது டிடிடி. அவற்றைக் கொண்டு அழகாக கண்ணைக் கவரும் விதமாக அன்பளிப்பு தயார் செய்து தரும்படி உத்தரவிட்டார்கள்.

ஞாயிறு அன்று பிரதமர் வரும்போது அவருக்கு அதை பரிசளித்து மிக உயர்ந்த பரிசாக தெரிவிக்க வேண்டும் என்று கருதியதாகத் தெரிகிறது.

ஆனால் மியூசியத்தில் இருக்க வேண்டிய விலை மதிப்பற்ற நாணயங்களை வெளியே எடுத்த விஷயம் மீடியாவுக்குத் தெரிந்து போனதால் டிடிடி பின்வாங்கி அந்த முயற்சியைக் கைவிட்டது என்கிறார்கள்.

முக்கிய பிரமுகர்கள் விஐபிகள் பாலாஜி தரிசனத்திற்கு திருமலை வந்தால் மகா துவாரம் வழியாக உள்ளே அழைத்துச் சென்று அவர்களுக்கு நேராக தரிசனம் செய்விப்பார்கள். பின் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வசனம் செய்வார்கள். பின் டிடிடி ஈவோ, ஜூனியர் ஈவோ இருவரும் சேர்ந்து பாலாஜி படம், தீர்த்தப் பிரசாதம் கொடுப்பார்கள். அவற்றுக்கு மாறாக மோடிக்கு நினைவுப்பரிசு அளிக்க வேண்டும் என்று உற்சாகம் காட்டிய அதிகாரிகளின் முயற்சி இப்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories