பிரதமர் மோதிக்கு பரிசு கொடுத்து அசத்த எண்ணி… அசடு வழிந்த அதிகாரிகள்!

IMG 20190610 WA0014 - 2026

திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிக உற்சாகம் காட்டி…. பிரதமர் மோடிக்காக புராதன நாணயங்களால் நினைவுப் பரிசு தயாரித்தளிக்க ஆர்வம் காட்டினார்கள்.

திருமலையில் தரிசனத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரத்தியேக காணிக்கை அளிப்பதற்கு முடிவெடுத்தனர் டிடிடி அதிகாரிகள்! ஆனால் ….அந்த விஷயம் வெளியே பரவியதால் பின்வாங்கிவிட்டனராம்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக திருமலை பாலாஜியை தரிசிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தார். அவருக்கு ஒரு அரிதான அன்பளிப்பு பரிசு அளித்து கௌரவிக்க டிடிடி அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக செய்தி கசிந்தது.

புராதன நாணயங்களால் அதனை தயாரிப்பதற்கு முயற்சிப்பதாக கூறப்பட்டு அது மீடியாவில் விவாதத்திற்கு இடமானது.

டிடிடி அதிகாரிகள் திருமலா மியூசியத்திலிருந்து 14ஆம் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன நாணயங்களையும் பலவித வடிவங்களில் உள்ள சில மாதிரிகளையும் பயன்படுத்தி ஒரு நினைவுப் பரிசை தயாரிக்கும் வேலையை வெளிநபர்களிடம் ஒப்படைத்தார்கள்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

இது தொடர்பாக சனிக்கிழமையே அவர்களிடம் நாணயங்களை ஒப்படைத்தது டிடிடி. அவற்றைக் கொண்டு அழகாக கண்ணைக் கவரும் விதமாக அன்பளிப்பு தயார் செய்து தரும்படி உத்தரவிட்டார்கள்.

ஞாயிறு அன்று பிரதமர் வரும்போது அவருக்கு அதை பரிசளித்து மிக உயர்ந்த பரிசாக தெரிவிக்க வேண்டும் என்று கருதியதாகத் தெரிகிறது.

ஆனால் மியூசியத்தில் இருக்க வேண்டிய விலை மதிப்பற்ற நாணயங்களை வெளியே எடுத்த விஷயம் மீடியாவுக்குத் தெரிந்து போனதால் டிடிடி பின்வாங்கி அந்த முயற்சியைக் கைவிட்டது என்கிறார்கள்.

முக்கிய பிரமுகர்கள் விஐபிகள் பாலாஜி தரிசனத்திற்கு திருமலை வந்தால் மகா துவாரம் வழியாக உள்ளே அழைத்துச் சென்று அவர்களுக்கு நேராக தரிசனம் செய்விப்பார்கள். பின் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வசனம் செய்வார்கள். பின் டிடிடி ஈவோ, ஜூனியர் ஈவோ இருவரும் சேர்ந்து பாலாஜி படம், தீர்த்தப் பிரசாதம் கொடுப்பார்கள். அவற்றுக்கு மாறாக மோடிக்கு நினைவுப்பரிசு அளிக்க வேண்டும் என்று உற்சாகம் காட்டிய அதிகாரிகளின் முயற்சி இப்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories