திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை ரத்து செய்ய அரசு முடிவு! ராஜினாமா செய்த சுதாகர் யாதவ்!

srinivas andhra minister - 2026

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவகர் குழுவை ரத்து செய்ய ஆந்திர அரசு முடிவு செய்தது. அதே நேரம் அறங்காவலர் குழுத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை ரத்து செய்வது என்று அரசு முடிவு எடுத்துள்ளது என்றும், ஏழுமலையான் கோவில் திருவாபரணங்கள் மீது பக்தர்களுக்கு உள்ள சந்தேகங்களை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும்  ஆந்திர அறநிலைய துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆந்திர அறநிலைய துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஸ்ரீ நிவாஸ் பேட்டி அளித்தார்.

அப்போது, கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு தேர்தல் முடிவுகளுக்கு பின் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அறங்காவலர் குழுவினர் பதவி விலக மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே அறங்காவலர் குழுவை ரத்து செய்து விரைவில் புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஏழுமலையானின் திருவாபரணங்கள் மீது பக்தர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. பக்தர்களுக்கு ஏழுமலையான் திருவாபரணங்கள் மீது இருக்கும் சந்தேகங்களுக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Putta Sudhakar Yadav Facebook - 2026அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் பணியில் இருக்கும் பரம்பரை அர்ச்சகர்கள் தொடர்பான பிரச்சனைகள் ஆந்திரா முழுவதும் உள்ளன. பரம்பரை அர்ச்சகர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாணப்படும்.

தேவஸ்தானத்திற்கு சொந்தமான 1300 கிலோ தங்கத்தை சென்னையில் இருந்து திருப்பதிக்கு கொண்டு வந்ததில் குழறுபடிகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றச்சாட்டுகள் மீது விசாரனை நடத்தி அவற்றில் உண்மை இருப்பதாக தெரிய வந்தால் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறினார்.

இதே நேரம், இந்த செய்தியாளர் சந்திப்பு குறித்த தகவல் வெளியான நிலையில், திருப்பதி திருமலை அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தனது பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.

subba reddy - 2026திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவராக தற்போது இருந்து வருபவர் புட்டா சுதாகர் யாதவ். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது இவர் அறங்காவலர் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டவர்.

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

இதனிடையே, புதிய அறங்காவலர் குழுத் தலைவராக ஜெகன் மோகனின் சித்தப்பா ஒய்.வி.சுப்பா ரெட்டி நியமிக்கப் படுவார் என்று தகவல்கள் வெளியாயின. ஆனால் அவர் ஒரு கிறிஸ்துவர் என்றும், இந்து மதத்தை சாராத ஒருவர் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அறங்காவலர் தலைவராக பதவி ஏற்பது தவறு என்றும் கருத்துகள் பரவின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories