லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவன்கிட்டே.. நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?!

madurai high court - 2026

நேர்மையற்ற முறையில் பணிநியமனம் பெறுவோரிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

நேர்மையற்ற முறையில் பணி நியமனம் பெறும் ஊழியர்களிடம் பொதுமக்கள் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை! மேலும், கடைநிலைப் பணியாளர்களை எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தேனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான உதயகுமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,  தனக்குப் பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த சேகர் என்பவருக்கு சிபாரிசு அடிப்படையில் காமயகவுண்டன்பட்டி பஞ்சாயத்து யூனியனில் இரவுக் காவலர் பணி கிடைத்துள்ளது. எனவே சேகரின் பணி நியமனத்தை ரத்து செய்து எனக்கு அந்தப் பணியை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணி, மிகத் தாமதமாக இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது, எனவே சேகரின் பணி நியமனத்தை ரத்து செய்ய முடியாது! என்று கூறினார்.

நேர்மையற்ற முறையில் நியமனம் பெறும் அரசு ஊழியர்களிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்!? திறமையற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு கரு புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறிய நீதிபதி, கடைநிலை பணியாளர்களை எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதலை தலைமைச் செயலர் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories