கேரள சிபிஐ(எம்)  தலைவரின் மகன் பினாய் கோடியேரிக்கு எதிராக பாலியல் வழக்கால் பரபரப்பு…….!

 

 

 

 

cpim kerla - 2026கேரளா சிபிஐ (எம்) தலைவரின் மகன் பினாய் கோடியேரிக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு!!

கேரள CPI(M) மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் இவரது மூத்த மகன் பினாய் கோடியேரி ஆகியோருக்கு மும்பை காவல்துறை புதன்கிழமை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோடியேரி கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவர் தலைமறைவாக உள்ளார்.

மும்பையில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த 33 வயது பெண் கடந்த 2009 ஆம் ஆண்டு துபாயில் உள்ள டான்ஸ் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணுக்கு கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் தொழில் அதிபர் பினாய் பாலகிருஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது.

இதனையடுத்து அவர் திருமணம் செய்வதாக கூறி தன்னை பலமுறை கற்பழித்ததாக, அந்த பெண் பினாய் பாலகிருஷ்ணன் மீது மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்த உறவால் தனக்கு எட்டு வயது குழந்தை இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த புகார் குறித்து போலீசார் பினாய் பாலகிருஷ்ணன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்ட மும்பை காவல்துறையினர் கேரளா காவல்துறையின் உதவியை நாடினர்.

இந்நிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த பினாய், முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அவர் மீது ஒஷிவாரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு 72 மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்ட நோட்டீஸுடன் மும்பை காவல்துறையினர் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் திருவாங்காட்டில் உள்ள பினாய் கோடியேரியின் மூதாதையர் இல்லத்தையும் பார்வையிட்டனர்.

தனது மூத்த மகன் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சிபிஐ (எம்) மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை கட்சியையும் தன்னையும் வழக்கில் இருந்து விலக்க முயன்றார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories