பீகார்- மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் மரணம்: பிரதமர் மோடி வேதனை!

Published:

modi open - 2026

பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக குழந்தைகள் பலர் மரணம் அடைந்தது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

மூளைக் காய்ச்சலால் பீகாரில் ஏற்பட்ட உயிரிழப்பு துரதிருஷ்டவசமானது, நமக்கெல்லாம் வெட்கக் கேடானது. இந்த விவகாரத்தை நாம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும், நான் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி!

பீஹார் மாநிலத்தில், மூளைக் காய்ச்சல் நோயால் உயிர் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 154 ஆக அதிகரித்துள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட முசாபர்புரில் மட்டும், 132 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

Related articles

Recent articles

spot_img