காஞ்சி- விக்ரஹம் செய்வதில் தங்கம் மோசடி! கைதான முன்னாள் குருக்களுக்கு ஜாமீன்!

rajappa gurukkal - 2026

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் விக்ரகம் செய்வதில் தங்கம் மோசடி செய்யப் பட்டதாகக் கூறி கைதானவர்களில் ஒருவரான ராஜப்பா குருக்களுக்கு கும்பகோணம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1600 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி தெய்வ விக்ரகங்கள் சேதம் அடைந்ததாகக் கூறி, புதிய ஐம்பொன் விக்ரகங்கள் செய்வதற்கு 2.82 கோடி ரூபாய் மதிப்பில் 8.7 கிலோ தங்கம் நன்கொடையாக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டது!

இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் புதிய சிலைகள் செய்வதில் மோசடி நடந்ததாகக் கூறி அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி, அர்ச்சகர் ராஜப்பா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்!

இந்த வழக்கில் வீரசண்முகமணி, கவிதா, முத்தையா ஸ்தபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியில் உள்ளனர்! இந்நிலையில் இந்த மோசடி குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், முன்னறிவிப்பு இன்றி கோயில் குடமுழுக்கு ஒன்று தொடர்பாக கனடா நாட்டுக்குச் சென்றார் முன்னாள் அர்ச்சகர் ராஜப்பா.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இதை அடுத்து, ராஜப்பா இந்தியாவுக்கு வரும்பொழுது தங்களுக்கு தகவல் அளிக்குமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விமான நிலையங்களுக்கு தகவல் கொடுத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி கனடாவில் இருந்து மும்பைக்குத் திரும்பி வந்தார் ராஜப்பா. அப்போது, அவரது அடையாளத்தை பரிசோதித்த மும்பை விமான நிலைய அதிகாரிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து ராஜப்பா கைது செய்யப்பட்டு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டார். தொடர்ந்து அவர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக தாம் அவதிப்படுவதாகக் கூறி தனக்கு ஜாமீன் வழங்குமாறு கும்பகோணம் நீதிமன்றத்தில் ராஜப்பா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜப்பாக்கு ஜாமீன் வழங்க தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்ததை அடுத்து  ராஜப்பாவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்!

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories