February 20, 2026, 11:50 AM
30 C
Chennai

காஞ்சி- விக்ரஹம் செய்வதில் தங்கம் மோசடி! கைதான முன்னாள் குருக்களுக்கு ஜாமீன்!

rajappa gurukkal - 2026

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் விக்ரகம் செய்வதில் தங்கம் மோசடி செய்யப் பட்டதாகக் கூறி கைதானவர்களில் ஒருவரான ராஜப்பா குருக்களுக்கு கும்பகோணம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1600 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி தெய்வ விக்ரகங்கள் சேதம் அடைந்ததாகக் கூறி, புதிய ஐம்பொன் விக்ரகங்கள் செய்வதற்கு 2.82 கோடி ரூபாய் மதிப்பில் 8.7 கிலோ தங்கம் நன்கொடையாக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டது!

இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் புதிய சிலைகள் செய்வதில் மோசடி நடந்ததாகக் கூறி அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி, அர்ச்சகர் ராஜப்பா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்!

இந்த வழக்கில் வீரசண்முகமணி, கவிதா, முத்தையா ஸ்தபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியில் உள்ளனர்! இந்நிலையில் இந்த மோசடி குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், முன்னறிவிப்பு இன்றி கோயில் குடமுழுக்கு ஒன்று தொடர்பாக கனடா நாட்டுக்குச் சென்றார் முன்னாள் அர்ச்சகர் ராஜப்பா.

இதை அடுத்து, ராஜப்பா இந்தியாவுக்கு வரும்பொழுது தங்களுக்கு தகவல் அளிக்குமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விமான நிலையங்களுக்கு தகவல் கொடுத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி கனடாவில் இருந்து மும்பைக்குத் திரும்பி வந்தார் ராஜப்பா. அப்போது, அவரது அடையாளத்தை பரிசோதித்த மும்பை விமான நிலைய அதிகாரிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து ராஜப்பா கைது செய்யப்பட்டு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டார். தொடர்ந்து அவர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக தாம் அவதிப்படுவதாகக் கூறி தனக்கு ஜாமீன் வழங்குமாறு கும்பகோணம் நீதிமன்றத்தில் ராஜப்பா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜப்பாக்கு ஜாமீன் வழங்க தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்ததை அடுத்து  ராஜப்பாவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories