ரூ.16 ஆயிரத்தில் மகள் திருமணத்தை முடித்த ஐஏஎஸ்., இப்போது திருப்பதி தேவஸ்தான ஜேஇஓ!

vasanthakumar andhra ias - 2026

16 ஆயிரம் ரூபாயில் மகளின் திருமணத்தை முடித்த ஐஏஎஸ் அதிகாரி வசந்தகுமார் இப்போது திருமலா திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராக நியமிக்கப் பட்டுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராகப்  பதவி வகித்துவரும் ஸ்ரீனிவாசராஜுவை ஆந்திர அரசு பணியிலிருந்து மாற்றியுள்ளது. திருமலா திருப்பதி தேவஸ்தான  இணை செயல் அலுவலராக ஸ்ரீனிவாச ராஜுவின் இடத்தில் வசந்த் குமார் நியமிக்கப் பட்டுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மனாக பொறுப்பேற்ற ஒய்வி சுப்பா ரெட்டி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழுவை மாற்றி அமைக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதற்கு ஏற்ப மாற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன.

ரோசையா ஆட்சிக் காலத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராக நியமிக்கப்பட்ட ஸ்ரீனிவாசராஜுவின் இடத்தில் வசந்த்குமாரை நியமித்து ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

21 July09 Thirupathi - 2026விசாகா மெட்ரோபாலிட்டன் டெவலப்மெண்ட் அதாரிடி VMDA வின் துணைத் தலைவராக உள்ள வசந்தகுமாருக்கு கூடுதலாக இந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளது அரசு. உடனடியாக திருமலா திருப்பதி தேவஸ்தான ஜேஇஓ.,வாக பொறுப்பேற்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீனிவாச ராஜுவுக்கு அரசு இன்னும் எந்தப் பொறுப்பையும் அளிக்கவில்லை. அடுத்த பணியிடத்துக்காக, பொது நிர்வாகத் துறையிடம் தகவல் அளிக்குமாறு அரசு அவருக்கு உத்தரவிட்டுள்ளது .

பி. வசந்தகுமார் முன்பு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் நரசிம்மனின் செயலாளராகப் பணியாற்றினார். 2012இல் ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற்ற அவர் விசாகா நகர் வளர்ச்சித் துறையின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

2017இல் வெறும் பதினாறு ஆயிரத்து நூறு ரூபாய் செலவில் தன் மகளுக்கு திருமணம் செய்து செய்திகளில் அதிகம் உலாவந்தார். 2019 பிப்ரவரியில் வெறும் 18 ஆயிரம் ரூபாயில் தன் மகனுக்கு திருமணம் செய்து மீண்டும் செய்திகளில் பேசப்பட்டார். மகனின் திருமணத்திற்கு பெண் வீட்டாரும் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்தனர்.

தன் இரு பிள்ளைகளின் திருமணத்திலும் விருந்தினர்களிடம் இருந்து மலர்ச் செண்டுகளோ, பரிசுப் பொருள்களோ இவர் பெறவில்லை. உங்கள் காணிக்கைகள் வேண்டாம். ஆசிகள் போதும் என்று திருமணப் பத்திரிக்கையில் தெளிவாக எழுதி யிருந்தார். அவரது எளிமை அப்போது பெரிதாக பேசப் பட்டது. அவர் தற்போது தேவஸ்தான இணை செயல் அலுவலர் ஆகியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories