பாஜக., கோழைகளினூடே… மராட்டிய சிங்கம் பால் தாக்கரேயின் தேவையை உணர்கிறோம்!

Published:

bal tackary - 2026

பழைய தில்லியில் சாந்தினி சௌக் பகுதியில் துர்கா மாதா கோயில் ஒன்று, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் திட்டமிட்டே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து பலரும் தங்களது கோபத்தை டிவிட்டர் பதிவுகளில் பகிர்ந்து வருகின்றனர்.

டிவிட்டர் பக்கங்களில் இந்தக் கோயிலின் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டுள்ளன! குறிப்பாக இஸ்லாமியர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு நொறுக்கப்பட்ட இந்த கோயில் குறித்த புகைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகின்றன!

பலரும் இந்த நேரத்தில் தான் சிவசேனையின் தலைவராக கர்ஜிக்கும் சிங்கம் ஆக இருந்த பால்தாக்கரே குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்!

இந்தியாவுக்கு தேவை பால்தாக்கரே போன்ற ஒருவர் என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்! மேலும் பலர் பாஜகவை கடுமையாக சாடி வருகின்றனர்!

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்கள் புடவை அணிந்து கொண்டு பொட்டு வைத்துக் கொண்டு எங்கோ ஓரிடத்தில் பஜனை பாடிக்கொண்டு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்!


பிரதமர் மோடிக்கு வெளிநாடு சுற்றிக் கொண்டு இஸ்லாமியரை தாஜா செய்யும் அரசியல் இப்போது கை வந்து விட்டது, இன்னொரு காங்கிரஸாக இருப்பதற்கு பேசாமல் பாஜக.,வை காங்கிரஸ் பி என்று வைத்துக் கொள்ளலாம். பாரதீய காங்கிரஸ் பார்ட்டி என்று போட்டுக் கொள்ளுங்கள் என்று கடுமையாக சாடி வருகின்றனர்.
modi muslims - 2026
குறிப்பாக கௌதம் காம்பிருக்கு புடவை அணிவித்து கிண்டல் செய்து வருகின்றனர்! இந்த நேரத்தில் ஊடகம் எங்கே? பாலிவுட் எங்கே? மதசார்பற்ற குழுக்கள் எங்கே? காங்கிரஸ் எங்கே? டிஎம்சி எங்கே? ஆம் ஆத்மி கட்சி எங்கே? திமுக எங்கே? தெலுங்கு தேசம் கட்சி எங்கே? பாஜ… ….  அட அதுவும் எங்கே? ஓ அவர்கள் இப்போது கைகோர்த்துக் கொண்டு  சமரசம் பேசிக் கொண்டு இருப்பார்கள் இல்லையா? என்றெல்லாம் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்!

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img