இந்த வயசிலும் என்னா எனர்ஜி?! பீப்பீ ஊதி ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த 87 வயது பாட்டி!

IMG 20190703 WA0005 - 2026

1983ஐப் போல் 2019லும் இந்திய அணி வெற்றி பெறும் என்று உற்சாகமூட்டிய பாட்டிக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிளாஸ்டிக் பீப்பீ ஊதி, இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார் 87 வயதுப் பாட்டி. அதன் மூலம் மீடியா உள்பட ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் அவர் கவர்ந்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நேற்று பர்மிங்காம் நகரில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணியை 28 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கொண்டு, அரையிறுதிக்கு முன்னேறியது.

அந்தப் போட்டியின் போது, காலரியில் அமர்ந்திருந்த இந்திய அணி ரசிகர்களை, இந்திய அணி வீரர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது 87 வயது மூதாட்டியான சாருலதா படேல் என்பவர், இந்தியக் கொடியைக் கையில் ஏந்தி, பிளாஸ்டிக் பீப்பியை வைத்துக் கொண்டு, உற்சாகம் ஊட்டினார். அவரை சந்தித்து அவருக்கு வணக்கம் சொன்னார் விராட் கோலி. அவரை அழைத்து தலையில் கை வைத்து ஆசி அளித்த சாருலதா படேல், இந்திய அணி 1983ஐப் போல் 2019லும் வெற்றி பெறும் என்றார்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

virat kohli1 - 2026தொடர்ந்து, ரோஹித் சர்மாவும் பாட்டியிடம் ஆசி பெற்றார். இதனை ஊடகங்கள் பலவும் தனியாக கவர் செய்து கவர்ந்தன. இதை அடுத்து பாட்டி மீது ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியது.

தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங்கின் போது இந்திய வீரர்கள் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினர். அப்போது கேலரியில் அமர்ந்திருந்த மூதாட்டி சாருலதா படேல், தேசிய கொடியை அசைத்து, பிளாஸ்டிக் ‘பீ்ப்பீ’யை ஊதி இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார். அந்தக் காட்சிகள் ஊடகங்களில் அதிகம் ஒளிபரப்பாகின.

இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் சாருலதா பாட்டியுடனான சந்திப்பு புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விராட் கோலி. அதில், ரசிகர்களின் அன்புக்கு நன்றி. குறிப்பாக சாருலதா படேல். வயது 87 என்றாலும், வயது என்பது ஒரு எண் தான். இவர் போன்ற உற்சாகமூட்டும் ரசிகர்களை வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை. அவரது ஆசி எங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இந்த வீடியோ காட்சிகள் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. நெட்டிசன்கள் உற்சாகத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories