ராகுல் ராஜினாமா நாடகம்! தான் தற்போது தலைவர் இல்லை என்கிறார்..! ஆனால்..

rahul tweet - 2026

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று, தாம் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறியுள்ள ராகுல் காந்தி, அதே போன்று தமது கட்சியின் மற்ற 17 மாநிலத் தலைவர்களும்  ராஜினாமா செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்று கூறியுள்ள ராகுல் காந்தி, ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டதால் இனி நான் தலைவராக நீடிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தகவல் வெளியிட்டுள்ளார்! இனியும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ள ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் தாம் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று 17 மாநிலங்களில் கட்சித் தலைவர்கள் பதவி விலகாத நிலையில் ராகுல் காந்தி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்!

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

மாநிலங்களில் கட்சியை சீரமைக்கும் வேலை இருப்பதாகவும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்!

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் ராகுல் காந்தி. அப்போது அவர், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஏற்கெனவே நான் கடிதம் அளித்து விட்டேன். எனவே தற்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் நான் இல்லை! புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு உடனடியாக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ராகுல் என்னதான் தாம் தலைவர் இல்லை தலைவர் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தாலும், ராஜினாமா கடிதம் கொடுத்ததாக சொன்ன உடனேயே, தனது டிவிட்டர் அக்கவுண்ட் ப்ரொஃபைல் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் தாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் என்று போட்டுக் கொண்டிருக்க வேண்டும்!

ஆனால் அவ்வாறு செய்யாமல், வெறுமனே பேச்சுக்கு மற்றவர்களைத் தூண்டி விடுவதற்காகவும் விளம்பரத்துக்காகவும், மக்களிடம் அனுதாபம் பெறுவதற்காகவுமே தாம் தலைவர் இல்லை தாம் தலைவர் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories