December 8, 2025, 10:38 PM
24.7 C
Chennai

அசடு வழிந்த ஆ.ராசா..! தடுமாறிய தயாநிதி! வீரத் தமிழச்சி நிர்மலா சீதாராமன்!

raja maran - 2025

17வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப் பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையுடன், முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிக் கொண்டிருக்கும் போது, தாம் பயின்ற தமிழ்ப் பாடலின் வரிகளை மேற்கோள் காட்டினார்.

அதற்காக அவர், புறநானூறு பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். அவர் இந்த சங்கத் தமிழ் இலக்கியம் குறித்து பேச்சைத் தொடங்கி, அதனை இயற்றிய பிசிராந்தையார் குறித்தும் கூறினார்.

பிசிராந்தையார் பெயரைக் கூறும் போது, பிசிர் ஆந்தையார் என்று சற்று தடுமாற்றத்துடனே அவர் கூறினார். அவருக்கு ஏற்ற வார்த்தைத் தடுமாற்றத்தை ஏதோ தாங்கள் எடுத்துக் கொடுப்பது போல், ஆ.ராசாவும் தயாநிதியும் பிசிராந்தையார் பிசிராந்தையார் என்று நிர்மலா சீதாராமன் காதில் விழும் வகையில் கூறினர். அதற்கு பதிலளிக்கும் வகையில், பிசிராந்தையார் என்று அவர்களைப் பார்த்துக் கொண்டு அழுத்தம் திருத்தமாகக் கூறினார் நிர்மலா சீதாராமன். (பிசிர் என்பது ஊர், ஆந்தையார் என்பது புலவரின் பெயர். பிசிர் ஆந்தையார் என்பதே சேர்த்து உச்சரிக்கப் பட்டு, பிசிராந்தையார் என்று ஆனது)

அதன் பின்னர் அந்த புறநானூறு பாடல் வரிகளை தமிழில் கூறிவிட்டு அந்த இரண்டு எம்பி.,களைப் பார்த்து இதன் அர்த்தம் என்ன தெரியுமா? என்று கேட்டபோது இருவரும் சற்றே சீரியஸ் முகத்துடன்… என்ன என்ன என்று கேட்பது போல் பார்த்தனர்.  ஆ.ராசா அசடு வழிய சிரித்தார். தமிழ் தெரிந்திருந்தும் பாடலின் பொருள் புரியாமல், ஏதோ பிசிராந்தையார் பெயரை மட்டும் அழுத்திக் கூறிய அவர்களின் ஆர்வக் கோளாறைக் கண்டு அவையில் உள்ளோர் நகைத்தனர்.

nirmala tamil - 2025அதன் பின்னர், இந்தப் பாடலுக்கான விளக்கத்தையும் கூறி, எதனால் இந்தப் பாடலை இங்கே கூறுகிறேன் என்பதற்கான சூழலையும் கூறிவிட்டு திருமதி நிர்மலா சீதாராமன் ஆ.ராசாவையும், தயாநிதி மாறனையும் பார்த்து புன்னகைத்தார். அப் போது அரங்கில் இருந்த அத்தனை பேரும் அவர்களைப் பார்த்து நகைத்தனர்.

அந்த வீடியோ காட்சி.. #வீரத்தமிழச்சிநிர்மலாசீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Entertainment News

Popular Categories