அசடு வழிந்த ஆ.ராசா..! தடுமாறிய தயாநிதி! வீரத் தமிழச்சி நிர்மலா சீதாராமன்!

raja maran - 2026

17வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப் பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையுடன், முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிக் கொண்டிருக்கும் போது, தாம் பயின்ற தமிழ்ப் பாடலின் வரிகளை மேற்கோள் காட்டினார்.

அதற்காக அவர், புறநானூறு பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். அவர் இந்த சங்கத் தமிழ் இலக்கியம் குறித்து பேச்சைத் தொடங்கி, அதனை இயற்றிய பிசிராந்தையார் குறித்தும் கூறினார்.

பிசிராந்தையார் பெயரைக் கூறும் போது, பிசிர் ஆந்தையார் என்று சற்று தடுமாற்றத்துடனே அவர் கூறினார். அவருக்கு ஏற்ற வார்த்தைத் தடுமாற்றத்தை ஏதோ தாங்கள் எடுத்துக் கொடுப்பது போல், ஆ.ராசாவும் தயாநிதியும் பிசிராந்தையார் பிசிராந்தையார் என்று நிர்மலா சீதாராமன் காதில் விழும் வகையில் கூறினர். அதற்கு பதிலளிக்கும் வகையில், பிசிராந்தையார் என்று அவர்களைப் பார்த்துக் கொண்டு அழுத்தம் திருத்தமாகக் கூறினார் நிர்மலா சீதாராமன். (பிசிர் என்பது ஊர், ஆந்தையார் என்பது புலவரின் பெயர். பிசிர் ஆந்தையார் என்பதே சேர்த்து உச்சரிக்கப் பட்டு, பிசிராந்தையார் என்று ஆனது)

அதன் பின்னர் அந்த புறநானூறு பாடல் வரிகளை தமிழில் கூறிவிட்டு அந்த இரண்டு எம்பி.,களைப் பார்த்து இதன் அர்த்தம் என்ன தெரியுமா? என்று கேட்டபோது இருவரும் சற்றே சீரியஸ் முகத்துடன்… என்ன என்ன என்று கேட்பது போல் பார்த்தனர்.  ஆ.ராசா அசடு வழிய சிரித்தார். தமிழ் தெரிந்திருந்தும் பாடலின் பொருள் புரியாமல், ஏதோ பிசிராந்தையார் பெயரை மட்டும் அழுத்திக் கூறிய அவர்களின் ஆர்வக் கோளாறைக் கண்டு அவையில் உள்ளோர் நகைத்தனர்.

nirmala tamil - 2026அதன் பின்னர், இந்தப் பாடலுக்கான விளக்கத்தையும் கூறி, எதனால் இந்தப் பாடலை இங்கே கூறுகிறேன் என்பதற்கான சூழலையும் கூறிவிட்டு திருமதி நிர்மலா சீதாராமன் ஆ.ராசாவையும், தயாநிதி மாறனையும் பார்த்து புன்னகைத்தார். அப் போது அரங்கில் இருந்த அத்தனை பேரும் அவர்களைப் பார்த்து நகைத்தனர்.

அந்த வீடியோ காட்சி.. #வீரத்தமிழச்சிநிர்மலாசீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories