அந்த செய்தி தெரிந்துதான் ஆளுநர் நரசிம்மன் அங்கே சென்றாரா?

Published:

IMG 20190716 WA0015 - 2026

அந்தச் செய்தி தெரிந்துதான் ஆளுநர் நரசிம்மன் அங்கே சென்றாரா?

ஆந்திரா புதிய ஆளுநராக பிஸ்வ பூஷன் ஹரிச்சந்தனை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதனால் ஆளுனர் நரசிம்மன் தெலங்காணாவிற்கு மட்டுமே பணிபுரிவார்.

ஆளுனர் மாறப்போகும் செய்தி அறிந்தவுடனே நரசிம்மன் விஜயவாடா சென்று ஜகனை சந்தித்தார்.

ஆந்திரப்பிரதேஷ் இணைந்த மாநிலமாக இருந்தபோது 2009 முதல் ஆளுநராகப் பணியாற்றிய ஈஎஸ்எல் நரசிம்மன் இனி தெலங்காணாவிற்கு மட்டுமே ஆளுநராக இருப்பார்.

ஒடிசாவைச் சேர்ந்த பிஜேபி தலைவர் பிஸ்வ பூஷனுக்கு அமைதியானவர் என்ற பெயர் உள்ளது.

அவரை நியமித்ததில் ஆந்திராவில் பிஜேபியின் கை ஓங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கவர்னர் மாற்றம் குறித்து முன்னதாகவே நரசிம்மனுக்கும் இரு மாநில முதல்வர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

அதனால்தான் சென்ற வாரம் நரசிம்மன் திடீரென்று ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா சென்று வந்தார்.

பயணத் திட்டத்தில் இல்லாதபோதும் ஆளுநர் விஜயவாடா சென்று வந்ததால் ஆந்திராவுக்கு புது கவர்னர் வருவார் என்ற பிரசாரம் நடந்தது .

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஜெகனை நரசிம்மன் சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் அவர்கள் இருவர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

புது கவர்னர் வரப்போவதால் ஜெகனோடு தனக்குள்ள நட்புறவுகளை கவனத்தில் கொண்டு நரசிம்மன் அவரை சந்தித்தார் என்று கூறப்படுகிறது.

கவர்னராக எப்போது ஆந்திரா சென்றாலும் கட்டாயம் கோவிலுக்கு சென்று தரிசித்து வருவது நரசிம்மனின் வழக்கம் . ஆனால் சென்ற வாரம் ஆந்திராவுக்கு சென்ற போது மட்டும் ஆலய தரிசனம் செய்யாமல் திரும்பி வந்தார் நரசிம்மன்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img