பதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா?

IMG 20190716 WA0017 - 2026

சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா?

காவல்துறையில் காவல் ஆய்வாளருக்கு இணையான சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் (Special Inspector) பதவி அறிவிப்பு மானியக் கோரிக்கையில் இடம் பெறுமா என, எஸ்.எஸ்.ஐ.,க்கள் (Special Sub Inspector) எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேரும் ஒருவர், பணிக் காலத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருக்கும் பட்சத்தில் கிரோடு-1, தலைமைக் காவலர் பதவி நிலை உயர்வு அளிக்கப்படுகிறது.

25 ஆண்டுக்குபின் சிறப்பு எஸ்.ஐ. என்ற நிலை உயர்வும் வழங்கப்படுகிறது. நேரடி எஸ்.ஐ.க்குரிய சம்பளம், சீருடை அளித்தாலும், பெரும்பாலும், தலைமைக் காவலர் கணக்கில் மட்டுமே அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விசாரணை அதிகாரி அந்தஸ்து வழங்குவதில்லை.

போலீஸ் அகாடமியில் 6 மாத பயிற்சி முடித்த பிறகே காவல் நிலையங்களில் நேரடி எஸ்.ஐ.க்கு இணையான பணிகள் ஒதுக்கப்படுகின்றன.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

சிறப்பு எஸ்.ஐ.களுக்கான பயிற்சியும் பணி மூப்பு அடிப்படையில் வழங்குவதில் சிலர் ஆய்வாளர் பதவி உயர்வை எட்டுவதில்லை. எந்தவித குற்றச் சாட்டுமின்றி 35 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தாலும், சிறப்பு எஸ்.ஐ. என்ற அந்தஸ்துடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.

இதை போக்கும் வகையில் ஆய்வாளருக்கு பதவி உயர்வுக்கு இணையான சிறப்பு ஆய்வாளர் என்ற பதவி நிலை வழங்கவேண்டும் என புலம்புகின்றனர். இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என சிறப்பு எஸ்.ஐ.க்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறப்பு எஸ்.ஐ.க்கள் சிலர் இதுகுறித்து பேசும்போது, “காவல்துறையை பொறுத்துவரை பிற அரசு துறை போன்று பதவி உயர்வு கிடையாது. அதற்கு பதிலாக நிலை உயர்வு வழங்கப்படுகிறது. எங்களுக்கு பிற ஒருவர் அமைச்சு பணியாளர் அல்லது பிற துறையில் பணியில் சேர்ந்தால் பல்வேறு பதவி உயர்வை பெற்று, அதிக சம்பள உயர்வு பெறுகின்றனர்.

தமிழகம் முழு வதும் 35 ஆண்டுகளை கடந்த சிறப்பு எஸ்.ஐ.க்கள் சுமார் 5 ஆயிரம் பேரும், 34 ஆண்டை தாண டியவர்கள் 3 ஆயிரமும் பேரும் பணி புரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எஸ்.ஐ. பயிற்சிக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

சிறப்பு எஸ்.ஐ.க்கு தற்போது வழங்கும் கிரேடு சம்பளம் ரூ.4,800 என்பதை ஆய்வாளருக்குரிய கிரேடு சம்பளமான ரூ.5,400 ஆக மாற்றி, சிறப்பு காவல் ஆய்வாளர் பதவி வழங்கவேண்டும். இது நீண்ட நாள் கோரிக்கையாகவே இருக்கிறது.

2016-ல் திமுக தேர்தல் அறிக்கையிலும் இது இடம் பெற்றிருந்தது. எனவே, ஜூலை 19-ல் நடக்கும் காவல் துறைக்கான மானியக் கோரிக்கை இது பற்றிய அறிவிப்பு வெளியாகுமா என்ற ஏக்கத்தில் உள்ளோம்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories