February 24, 2026, 7:24 PM
29.8 C
Chennai

பதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா?

IMG 20190716 WA0017 - 2026

சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா?

காவல்துறையில் காவல் ஆய்வாளருக்கு இணையான சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் (Special Inspector) பதவி அறிவிப்பு மானியக் கோரிக்கையில் இடம் பெறுமா என, எஸ்.எஸ்.ஐ.,க்கள் (Special Sub Inspector) எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேரும் ஒருவர், பணிக் காலத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருக்கும் பட்சத்தில் கிரோடு-1, தலைமைக் காவலர் பதவி நிலை உயர்வு அளிக்கப்படுகிறது.

25 ஆண்டுக்குபின் சிறப்பு எஸ்.ஐ. என்ற நிலை உயர்வும் வழங்கப்படுகிறது. நேரடி எஸ்.ஐ.க்குரிய சம்பளம், சீருடை அளித்தாலும், பெரும்பாலும், தலைமைக் காவலர் கணக்கில் மட்டுமே அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விசாரணை அதிகாரி அந்தஸ்து வழங்குவதில்லை.

போலீஸ் அகாடமியில் 6 மாத பயிற்சி முடித்த பிறகே காவல் நிலையங்களில் நேரடி எஸ்.ஐ.க்கு இணையான பணிகள் ஒதுக்கப்படுகின்றன.

சிறப்பு எஸ்.ஐ.களுக்கான பயிற்சியும் பணி மூப்பு அடிப்படையில் வழங்குவதில் சிலர் ஆய்வாளர் பதவி உயர்வை எட்டுவதில்லை. எந்தவித குற்றச் சாட்டுமின்றி 35 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தாலும், சிறப்பு எஸ்.ஐ. என்ற அந்தஸ்துடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.

இதை போக்கும் வகையில் ஆய்வாளருக்கு பதவி உயர்வுக்கு இணையான சிறப்பு ஆய்வாளர் என்ற பதவி நிலை வழங்கவேண்டும் என புலம்புகின்றனர். இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என சிறப்பு எஸ்.ஐ.க்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறப்பு எஸ்.ஐ.க்கள் சிலர் இதுகுறித்து பேசும்போது, “காவல்துறையை பொறுத்துவரை பிற அரசு துறை போன்று பதவி உயர்வு கிடையாது. அதற்கு பதிலாக நிலை உயர்வு வழங்கப்படுகிறது. எங்களுக்கு பிற ஒருவர் அமைச்சு பணியாளர் அல்லது பிற துறையில் பணியில் சேர்ந்தால் பல்வேறு பதவி உயர்வை பெற்று, அதிக சம்பள உயர்வு பெறுகின்றனர்.

தமிழகம் முழு வதும் 35 ஆண்டுகளை கடந்த சிறப்பு எஸ்.ஐ.க்கள் சுமார் 5 ஆயிரம் பேரும், 34 ஆண்டை தாண டியவர்கள் 3 ஆயிரமும் பேரும் பணி புரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எஸ்.ஐ. பயிற்சிக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது.

சிறப்பு எஸ்.ஐ.க்கு தற்போது வழங்கும் கிரேடு சம்பளம் ரூ.4,800 என்பதை ஆய்வாளருக்குரிய கிரேடு சம்பளமான ரூ.5,400 ஆக மாற்றி, சிறப்பு காவல் ஆய்வாளர் பதவி வழங்கவேண்டும். இது நீண்ட நாள் கோரிக்கையாகவே இருக்கிறது.

2016-ல் திமுக தேர்தல் அறிக்கையிலும் இது இடம் பெற்றிருந்தது. எனவே, ஜூலை 19-ல் நடக்கும் காவல் துறைக்கான மானியக் கோரிக்கை இது பற்றிய அறிவிப்பு வெளியாகுமா என்ற ஏக்கத்தில் உள்ளோம்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

Topics

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories