அப்பர் பர்த்திலிருந்து விழுந்து நாற்பது வயது பெண் உயிரிழப்பு !

train bang - 2026மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 40 வயது பெண்ணான சரஸ்வதி பனிசால் என்பவர் பயணம் செய்தார். ஏசி கோச்சில் தனக்கு ஒதுக்கப்பட்ட மேல் படுக்கையை அவர் பயன்படுத்தி இருக்கிறார். பெங்களூருவை நெருங்கியதும் மேல் படுக்கையில் இருந்து இறங்க அவர் முயற்சி செய்துள்ளார். அப்போது கால் தடுக்கி தவறி விழுந்தார் இதனால் அவருக்கு பலமாக அடிபட்டதுtrain seat - 2026உடனடியாக அந்த பெண்மணி அடிபட்டது குறித்து ஒருவர் ரயில்வேத்துறைக்கு ட்விட்டரில் தகவல் தெரிவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம் மருத்துவக்குழுவை தயார் செய்துள்ளது. ரயில் வந்ததும் சரஸ்வதிக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பின் மேற்கொண்ட சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்த சரஸ்வதி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து பேசிய மருத்துவர் ஸ்நேகலதா, ”ரயில் வருவதற்கு முன்னதாக நாங்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். ரயில் வந்ததும் சரஸ்வதிக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவாக சரஸ்வதி பதில் அளித்தார். பின்னர் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.uper bed - 2026அப்போது கூட உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு காவலர்களிடம் சரஸ்வதி தெரிவித்தார். ஆனால் கொஞ்ச நேரத்தில் அவர் பேச்சு தடுமாறி நினைவிழக்கத் தொடங்கினார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தலையில் பலமாக அடிபட்டு உள்காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories