ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு எண் 370 ஐ திரும்பப் பெற்றுக் கொண்டதற்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் தற்காலிக சட்டப்பிரிவு 370 திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டது. சுமார் 70 வருடங்களுக்குப் பின்னர் இந்த சட்டப் பிரிவு திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
இதை அடுத்து இதற்கான அரசாணையை வெளியிட்டது மத்திய சட்டத்துறை அமைச்சகம்!
முன்னதாக, அப்போதைய குடியரசுத் தலைவரால் திடீரென புகுத்தப் பட்ட சட்டப் பிரிவு 370, தற்போதைய குடியரசுத் தலைவரால் திரும்பப் பெறப்பட்டு, தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில் தற்போது அரசாணையும் வெளியிடப் பட்டுள்ளது.