சதாசிவத்தை மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கக் கூடாது: வழக்கு

Published:

புதுதில்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சதாசிவத்தை தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யக்கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த பி.சதாசிவம், ஓய்வு பெற்ற பின்னர் கேரள மாநில ஆளுநராகப் பதவியேற்றார். இந்நிலையில், அவர் மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என்றும், மத்திய அரசு அதுகுறித்துப் பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின. தற்போது மனித உரிமை ஆணைய தலைவராக உள்ள நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிக்காலம் வரும் மே மாதம் 12ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து இந்தப் பதவிக்கு சதாசிவத்தின் பெயரை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் பெயரை தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img