
விஜயவாடா நகரத்தில் கரோனா வைரஸ் கேசுகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. அதனால் கிருஷ்ணா மாவட்டம் கலெக்டர் இந்தியாஜ் முக்கிய அறிவிப்பு செய்தார்.
விஜயநகரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. தினம் மிகப்பெரும் எண்ணிக்கையில் கரோனா வைரஸ் கேசுகள் பதிவாகி வருகின்றன. அதனால் கிருஷ்ணா மாவட்ட கலெக்டர் இந்தியாஜ் செவ்வாயன்று முக்கியமான அறிவிப்பு செய்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலெக்டர் இந்தியாஜ் கலந்துரையாடினார். இந்த சந்தர்ப்பத்தில் நகரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்குக்கு மேலாக வார்டுகளை கண்டைன்மென்ட் ஜோன்களாக அறிவித்தார் .
விஜயவாடா நகரத்தில் மொத்தம் 64 வார்டுகள் இருக்கின்றன. 42 வார்டுகளை கன்டைன்மென்ட் ஜோன்களாக அடையாளம் கண்டார்கள். இந்த ஜோன்களில் லாக்டௌன் நிபந்தனைகள் எப்போதும் போல் அமலில் இருக்கும் என்று மாவட்ட கலெக்டர் இந்தியாஜ் தெளிவுபடுத்தினார். கனக துர்கா ஆலயம் இருக்கும் இடம் கூட கன்டைன்மென்ட் ஜோனிலேயே வருவது கவனிக்கத்தக்கது.
புதன் கிழமையிலிருந்து மேற்கொண்டு உத்தரவு வரும் வரை விஜயவாடாவில் லாக்டௌன் நிபந்தனைகளின் உத்தரவுகள் கடைபிடிக்கப்படும். விஜயவாடாவில் விபரீதமாக கரோனா தொற்றுநோய் கேசுகள் அதிகமாவதால் வேறு வழியின்றி உத்தரவுகளை வெளியிட்டதாக கலெக்டர் இந்தியாஜ் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பால் நகரத்தில் உள்ள பல முக்கிய இடங்கள் கட்டுப்பாட்டு ஜோனில் சேர்கின்றன. நகரத்தில் உள்ள 42 வார்டுகளில் லாக்டௌன் தொடர்ந்தால் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு இருக்கும் நகரம் மொத்தமும் லாக்டௌன் கீழ்வரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.