நிலவில் நீர்.. சந்திராயன் அனுப்பிய தகவல்!

chantrayan
chantrayan

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா என்று நாசா ஒரு புறம் தீவிரமாக ஆராய்ச்சி வருகிறது.

அதேபோல், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைத் தேடி அதை நிரூபிக்கும் பணியை மும்முரமாக செய்து வருகிறது.

இஸ்ரோவின் சந்திரயான்-2 இந்த பணிக்காக நிலவில் மேல் வளம் வந்துகொண்டிருக்கிறது. இப்போது மிகவும் சுவாரசியமான தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சந்திரயான் -2 விண்கலம் சமீபத்தில் தனது இரண்டாம் ஆண்டு நிறைவை நிறைவு செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான வெற்றி செய்தியுடன், சந்திரயான் -2 விண்கலம் நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் -2 விண்கலம் நிலவின் நிழல் நிறைந்த பகுதிகளில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

moon
moon

இந்த நீர் அடையாளங்கள் நிலவில் நீராக இல்லாமல், உறைந்த பனியின் தடயங்களாகக் காணப்பட்டுள்ளது என்று இஸ்ரோவின் விஞ்ஞானிகள் குழு தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை இஸ்ரோ ஏற்பாடு செய்த இரண்டு நாள் ஆன்லைன் சந்திர அறிவியல் கலந்தாய்வில் இந்த செய்தி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவில் நிரந்தர நிழல் பகுதி என்று குறிப்பிட்ட சில பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் எப்போதுமே சூரியனின் ஒளி பட்டதில்லை, இவை நிரந்தரமாக எப்போதும் நிழலால் சூழப்பட்டுள்ளது.

இந்த இருண்ட நிழல் பகுதியில் தான் நீர் அடையாளங்கள் இருப்பதற்கான தகவலை சந்திரயான் -2 விண்கலம் கைப்பற்றியுள்ளது. நிலவின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் தான் இந்த நிரந்தர நிழலாடும் பகுதிகள் அமைத்திருக்கிறது.

இவை சந்திர மேற்பரப்பில் குளிர்ச்சியான பகுதிகளாக அமைகின்றன. சந்திரயான்-2 விண்கலத்தில் இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ராடார் பொருத்தப்பட்டிருப்பதை இஸ்ரோ தலைவர் கே சிவன் வெளிப்படுத்தினார்.

sivan
sivan

இது பொருட்களின் மின் பண்புகளின் அளவீடுகளைப் பயன்படுத்தி மேற்பரப்புகளை வரைபடமாக்குகிறது. இதன் மூலம் சந்திர மேற்பரப்பு மற்றும் பனி மேற்பரப்பை இந்த ரேடார் வேறுபடுத்திக் காட்டுகிறது.

சந்திர சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்ட எட்டு பேலோட்களில் இந்த ரேடாரும் ஒன்றாகும். மற்ற பேலோட்களில் டெரைன் மேப்பிங் கேமரா, ஆர்பிட்டர் ஹை-ரெசல்யூஷன் கேமரா, லார்ஜ் ஏரியா சாஃப்ட் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், சோலார் எக்ஸ்-ரே மானிட்டர், இமேஜிங் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர், அட்மோஸ்பரிக் காம்போசிஷன் எக்ஸ்ப்ளோரர் மற்றும் டூயல்-ஃப்ரீக்வென்சி ரேடியோ சயின்ஸ் பரிசோதனை ஆகியவை இத்துடன் அடக்கப்பட்டுள்ளது.

கிரகப் பணிக்காக முன்னோக்கிச் சென்ற உலகின் முதல் முழு துருவ முனைப்பு ரேடார் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார். டிஎஃப்எஸ்ஏஆர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அனூப் தாஸ், கடந்த காலத்தில் சந்திரன் அனுபவித்த தாக்கங்களைப் பற்றி இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறந்த யோசனையை அளிக்கக்கூடியது என்று கூறியுள்ளார்.

ஆர்பிட்டரின் உயர்-தெளிவுத்திறன் கேமரா வழியாக அனுப்பப்பட்ட தரவு மற்றும் புகைப்படங்கள் பாரிய பள்ளங்களை ஆய்வு செய்ய மேலும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், விண்கலத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories