நிலவில் நீர்.. சந்திராயன் அனுப்பிய தகவல்!

chantrayan
chantrayan

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா என்று நாசா ஒரு புறம் தீவிரமாக ஆராய்ச்சி வருகிறது.

அதேபோல், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைத் தேடி அதை நிரூபிக்கும் பணியை மும்முரமாக செய்து வருகிறது.

இஸ்ரோவின் சந்திரயான்-2 இந்த பணிக்காக நிலவில் மேல் வளம் வந்துகொண்டிருக்கிறது. இப்போது மிகவும் சுவாரசியமான தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சந்திரயான் -2 விண்கலம் சமீபத்தில் தனது இரண்டாம் ஆண்டு நிறைவை நிறைவு செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான வெற்றி செய்தியுடன், சந்திரயான் -2 விண்கலம் நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் -2 விண்கலம் நிலவின் நிழல் நிறைந்த பகுதிகளில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

moon
moon

இந்த நீர் அடையாளங்கள் நிலவில் நீராக இல்லாமல், உறைந்த பனியின் தடயங்களாகக் காணப்பட்டுள்ளது என்று இஸ்ரோவின் விஞ்ஞானிகள் குழு தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை இஸ்ரோ ஏற்பாடு செய்த இரண்டு நாள் ஆன்லைன் சந்திர அறிவியல் கலந்தாய்வில் இந்த செய்தி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவில் நிரந்தர நிழல் பகுதி என்று குறிப்பிட்ட சில பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் எப்போதுமே சூரியனின் ஒளி பட்டதில்லை, இவை நிரந்தரமாக எப்போதும் நிழலால் சூழப்பட்டுள்ளது.

இந்த இருண்ட நிழல் பகுதியில் தான் நீர் அடையாளங்கள் இருப்பதற்கான தகவலை சந்திரயான் -2 விண்கலம் கைப்பற்றியுள்ளது. நிலவின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் தான் இந்த நிரந்தர நிழலாடும் பகுதிகள் அமைத்திருக்கிறது.

இவை சந்திர மேற்பரப்பில் குளிர்ச்சியான பகுதிகளாக அமைகின்றன. சந்திரயான்-2 விண்கலத்தில் இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ராடார் பொருத்தப்பட்டிருப்பதை இஸ்ரோ தலைவர் கே சிவன் வெளிப்படுத்தினார்.

sivan
sivan

இது பொருட்களின் மின் பண்புகளின் அளவீடுகளைப் பயன்படுத்தி மேற்பரப்புகளை வரைபடமாக்குகிறது. இதன் மூலம் சந்திர மேற்பரப்பு மற்றும் பனி மேற்பரப்பை இந்த ரேடார் வேறுபடுத்திக் காட்டுகிறது.

சந்திர சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்ட எட்டு பேலோட்களில் இந்த ரேடாரும் ஒன்றாகும். மற்ற பேலோட்களில் டெரைன் மேப்பிங் கேமரா, ஆர்பிட்டர் ஹை-ரெசல்யூஷன் கேமரா, லார்ஜ் ஏரியா சாஃப்ட் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், சோலார் எக்ஸ்-ரே மானிட்டர், இமேஜிங் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர், அட்மோஸ்பரிக் காம்போசிஷன் எக்ஸ்ப்ளோரர் மற்றும் டூயல்-ஃப்ரீக்வென்சி ரேடியோ சயின்ஸ் பரிசோதனை ஆகியவை இத்துடன் அடக்கப்பட்டுள்ளது.

கிரகப் பணிக்காக முன்னோக்கிச் சென்ற உலகின் முதல் முழு துருவ முனைப்பு ரேடார் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார். டிஎஃப்எஸ்ஏஆர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அனூப் தாஸ், கடந்த காலத்தில் சந்திரன் அனுபவித்த தாக்கங்களைப் பற்றி இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறந்த யோசனையை அளிக்கக்கூடியது என்று கூறியுள்ளார்.

ஆர்பிட்டரின் உயர்-தெளிவுத்திறன் கேமரா வழியாக அனுப்பப்பட்ட தரவு மற்றும் புகைப்படங்கள் பாரிய பள்ளங்களை ஆய்வு செய்ய மேலும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், விண்கலத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories