காஷ்மீர் விவகாரம் – விமான நிலையம் மற்றும் இரயில் நிலயங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.

M. teraer - 2026

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையடுத்து, விமான நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் குறி வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அதிரடியாக நீக்கியது.

இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படும் மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் காஷ்மீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியா தனது நாட்டில் செய்துள்ள இந்த நிர்வாக சீர்திருத்தத்துக்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீரை தங்களுடன் சேர்த்து கொள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த பாகிஸ்தானின் ஆசையில் மண் விழுந்துள்ளது.

hafies 1 - 2026

இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆத்திரத்தில் உள்ளார்.

இந்தியா மீது தீவிரவாதிகள் மீண்டும் ஒரு பெரிய தாக்குதல் நடத்துவார்கள் என்று இம்ரான்கான் பூச்சாண்டி காட்டினார்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

அவரது உளறலை இந்தியா கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்தியா மீது இம்ரான்கான் தனது ஆத்திரத்தை காட்ட தொடங்கியுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்ல இம்ரான்கான் ஆலோசித்து வருகிறார்.

அது மட்டுமின்றி பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை வெளியேற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

imrankan - 2026

இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளை துண்டிக்கப் போவதாகவும் இம்ரான்கான் கூறியுள்ளார்.

அவரது இந்த நடவடிக்கைகள் இந்தியாவை விட பாகிஸ்தானுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

என்றாலும் இந்தியாவுக்கு எதிராக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று இம்ரான்கான் துடிதுடித்தப்படி உள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் உளவுத்துறை மூத்த அதிகாரிகள், தீவிரவாதிகளை தொடர்பு கொண்டு, இந்தியாவுக்குள் தற்கொலை தாக்குதல்களை நடத்துமாறு பேசியதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்தது.

காஷ்மீர் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள சுமார் 300 தீவிரவாதிகளில் சிலரை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்யும் முயற்சிகளை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டதையும் உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இதற்கிடையே இந்தியாவுக்குள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி செய்வதாக சர்வதேச உளவு அமைப்புகள் தகவல் கொடுத்துள்ளன.

குறிப்பாக பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் டெல்லி மற்றும் மும்பை நகரில் தற்கொலை தாக்குதல்களை நடத்த இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு முன்பு இந்த தாக்குதல்களை அரங்கேற்ற தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

இதற்கிடையே சில விமான நிலையங்களையும் தீவிரவாதிகள் குறி வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, நாக்பூர், சண்டிகர் ஆகிய 7 விமான நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் அல்லது விமானத்தை கடத்த முயற்சி செய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

RPF - 2026

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

தீவிரவாதிகள் கைவரிசை காட்ட முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் 2 தடவை இந்த உஷார் எச்சரிக்கை அறிவிப்பை விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டது.

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சர்வதேச விமான நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களுக்கு வரும் ஒவ்வொருவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

விமான நிலையத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான பயணிகள் அனைவரையும் முழுமையாக சோதித்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 15-ந்தேதி வரை இந்த சோதனை தீவிரமாக நடைபெறும்.

எனவே பயணிகள் விமான நிலையத்துக்கு முன் கூட்டியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories