‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’: மீண்டும் தலைவர் ஆனார் சோனியா காந்தி!

sonia gandhi president - 2026

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் சோனியா காந்தி நியமிக்கப் பட்டுள்ளார். காங்கிரஸ் செயற்குழு மூலம் சனிக்கிழமை நேற்று பின்னிரவு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த முறை அவர் காங்கிரஸ் தலைவரானபோது, ​​அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரி, தில்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ஒரு குளியலறையில் வைத்து பூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, எனவே கட்சியின் தலைவராக பதவியேற்க சோனியா காந்தி தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்திற்குள் நுழைவதை அவரால் அப்போது தடுக்க முடியவில்லை.

கடந்த மாதம் சோனியாவின் மகன் ராகுல் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னரும், தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்தார். எனது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாகவும் இருந்தார். உண்மையில், அவரது மகன் ராகுல் காந்தி, சுமார் இருபது ஆண்டுகள் சோனியா காந்தி கட்சித் தலைவராக இருந்த பின்னர், அவரிடமிருந்து தலைமைப் பதவியைப் பெற்றார்.

இருப்பினும் தாம் ராஜினாமா செய்த போது, காங்கிரஸ் கட்சித் தலைவரின் பதவி ஒரு ‘காந்தி’யிடம் செல்லக்கூடாது என்றும் இளைய தலைவரிடம் செல்ல வேண்டும் என்றும் ராகுல் காந்தி பிடிவாதமாக இருந்தார். இருப்பினும், ​​இறுதியில் அவரது 72 வயதான தாய் சோனியாவே மீண்டும் தலைவராகி விட்டார்.

காங்கிரஸ் செயற்குழு நேற்று மாலை சோனியாவின் பெயரை வெளியிட்ட பின்னர், சோனியா காந்தி தற்போது ஒரு ‘தற்காலிக தலைவராக’ பணியாற்றுவார் என்று தெரிவிக்கப் பட்டது. சோனியாவின் பெயரை அறிவிப்பதற்கு முன்னர், ராகுல் காந்தி தனது ராஜினாமாவை திரும்பப் பெறவேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு மீண்டும் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

sonia rahul robert priyanka2 - 2026‘காந்தி’ பெயரிலான நேரு குடும்பத்தைத் தாண்டி காங்கிரஸால் சிந்திக்கக்கூட முடியாது என்று காங்கிரஸ் செயற்குழு காட்டியிருக்கிறது சோனியா காந்தியின் மகளும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி என்ற பிரியங்கா ராபர்ட் வதேரா, காங்கிரஸ் பொதுச் செயலாளராக இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிகார பூர்வமாக அரசியலில் களம் இறங்கினார். அதை அடுத்து, காங்கிரஸின் அடுத்த தலைவராக பிரியங்கா வதேரா வருவார் என்று காங்கிரஸில் பரவலாக பேசப் பட்டது. இந்திரா காந்தியின் மூக்கைப் போல் பிரியங்காவின் மூக்கு உள்ளது என்றும், இந்திராவின் தோற்றத்தில் இருப்பதால் காங்கிரஸுக்கு அவர் தலைவராக வேண்டும் என்றும் காங்கிரஸார் கூறியதாக பேசப் பட்டது. இருப்பினும், நேற்று காலையிலும் மாலை தாமதமாகவும் ராகுல் காந்தியின் பெயர் மீண்டும் கட்சித் தலைவராக அடிபட்டது. இந்நிலையில், பின்னிரவு ராகுலின் பெயர் அடிக்கப்பட்டு அவரது தாய் சோனியாவின் பெயர் எடுபட்டது.

நேற்று இரவு தாமதமாக ராகுல் காந்தியின் ராஜினாமா காங்கிரஸ் செயற்குழுவால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. அவர் கட்சித் தலைவர் பதவியை அதிகார பூர்வமாக ராஜினாமா செய்த ஒரு மாதத்துக்குப் பின்னர், சோனியா ‘இடைக்காலத் தலைவராக’ நியமிக்கப் பட்டுள்ளார். இந்த திட்டத்தை குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா ஆகியோர் கொண்டுவந்தனர். இதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் ஆதரவளித்துள்ளார்.

nehru gandhi family - 2026
காந்தி பெயரிலான நேரு பரம்பரை…

சோனியா காந்தி, வழக்கமாக பெரும்பாலான பதவிகளை ஏற்க தயங்குகிறார், அதை அவர் விரும்புவதில்லை, இருப்பினும் இறுதியில் பொது மனநிலை காரணமாக அவற்றை ஏற்கிறார் என்றும், இந்த நேரத்திலும் அவரே கை கொடுத்தார் என்றும் காங்கிரஸார் கூறுகின்றனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டில் அவர் தனது உள் மனசின் குரலைக் கேட்டு, தனது பிரதமர் பதவி வற்புறுத்தலைக் ‘கைவிட்டார்’ என்றும், இந்த முறையும் அவர் ‘இக்கட்டான இந்த சூழ்நிலையிலிருந்து கட்சிக்கு உதவுவதற்காக’ மீண்டும் கட்சியின் உயர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்றும் கூறுகின்றனர் காங்கிரஸார்.

அடுத்து, காங்கிரஸ் செயற்குழுவில் முழுமையான தேர்தல்கள் நடைபெறும் வரை சோனியா கட்சியின் ‘இடைக்கால’ தலைவர் பதவியில் இருப்பார். ஒருவேளை அவர் தனது மகள் பிரியங்கா காந்திக்கு இந்த தலைவர் பதவியை மடைமாற்றி விடலாம். பிரியங்காவும் ஒரு தயக்கமற்ற அரசியல்வாதி, குடும்பத்தின் மற்றவர்களைப் போலவே எப்போதும் பொது மனநிலையோடு செல்பவர்தான்!

‘காந்தி’ பெயரிலான நேரு குடும்பத்தவர் அல்லாத ஒருவர் கட்சித் தலைவரானால், கட்சி ‘சிதைந்துவிடும்’ என்று காங்கிரஸில் சிலர் நம்புகின்றனர்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர், ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், மிலிந்த் தியோரா என காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு சிலரது பெயர்கள் அடிபட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories