வைரமுத்து மீது இந்த சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை..! அதனால்தான் இப்படி…!

10 July11 vaira muthu - 2026

வைரமுத்து மீது இந்த சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதனால்தான் வைரமுத்துவே காணொளித் திரையில் தோன்றி, தயவு செய்து நான் நல்லவனா கெட்டவனா என்பதை இப்போதே முடிவு செய்யாதீர்கள்! நீதிமன்றம் சொன்ன பிறகு நம்புங்கள் என்று கதற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வைரமுத்து அடிவருடிகளும் கூட, ஆண்டாள் நாச்சியார் நேரில் வந்து சொல்லட்டும் நம்புகிறோம்; சின்மயி என்னும் ஒருத்தி சொல்லிவிட்டால் உடனே வைரமுத்து தவறு செய்வதாக ஆகிவிடுமா?

இப்படி யார் வேணுமானாலும் யார் மீது வேண்டுமென்றாலும் பழி போடலாம். அவதூறு பரப்பலாம். அதுவும் தப்பு நடந்து பல வருடங்கள் கழித்து.! என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் அவதூறான கொச்சை வார்த்தைகளை பொதுவெளியில் பரப்பி, நாங்கள் அப்படிப்பட்டவர்கள்தான் என்று தெள்ளத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

தவறு நடந்தபோதோ அதற்கு சில வருடங்கள் பிறகோ சொல்லாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். Survival, threat high places , political என்று. இன்று காலம் கனிந்திருக்கலாம். அதனால் ஒரு விஷயம் பல வருடங்களுக்குப் பிறகு வெளி வருகிறது என்பதனாலேயே அது பொய்யாகாது.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்கினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. ஒருவர் மீது பழி விழுந்தால் சமுதாயம் என்ன சொல்லும்..?

இவர் அப்படிப்பட்டவர் இல்லை. செய்திருக்க மாட்டார் என்று இவர் மதிப்பு பேசும், நண்மதிப்பு இருந்தால்.!

வைரமுத்து விஷயத்தில் இவருக்கு வேண்டியவர்களே அப்படிச் சொல்லவில்லை. ஆதாரம் இருக்கா, இவ்வளவு வருஷம் ஏன் சொல்லவில்லை, சின்மயி புகழுக்காக ஆதாயத்துக்காக கூச்சலிடுகிறார் என்கிறார்கள்.!

ஆக, வைரமுத்து மீது நம்பிக்கை இல்லை என்பது நன்றாகப் புலப்படுகிறது. சின்மயி மட்டுமா சொல்லி இருக்கிறார் என்றால் இல்லை. இன்னும் சிலரும் சொல்லி இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

சரி , வைரமுத்து எப்படிப்பட்டவர்? இவர் பேச்சில் ஹிந்துக்களுக்கு எதிராக த்வேஷம் இருக்கும்!  பெண்மையை மதிக்காதவர் என்று இவர் வாழ்க்கை சொல்லும்.

ஆதாரமற்று போகிற போக்கில் பேசுபவர் என்று சமீபத்திய நிகழ்வுகள் தெளியப்படுத்தும். சரி அப்போ அவர் எப்படிப்பட்டவர் என்று எப்படி எடை போடுவது?
/
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! – கவிஞர் வாலி.

ஊர் சொல்ல மறுக்கிறது!  அதற்கு அவரே விடை தந்தார் அன்று!  ஆண்டாளே நேரில் வந்து சொல்லட்டும் என்று!

ஆம் ! ஆண்டாள் நாச்சியாரே நேரில் வந்து சொல்லட்டும்!  நீ நிரபராதி என்று நம்புகிறோம் !

கருத்து: வானமாமலை பத்மனாபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories