வைரமுத்து மீது இந்த சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை..! அதனால்தான் இப்படி…!

10 July11 vaira muthu - 2026

வைரமுத்து மீது இந்த சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதனால்தான் வைரமுத்துவே காணொளித் திரையில் தோன்றி, தயவு செய்து நான் நல்லவனா கெட்டவனா என்பதை இப்போதே முடிவு செய்யாதீர்கள்! நீதிமன்றம் சொன்ன பிறகு நம்புங்கள் என்று கதற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வைரமுத்து அடிவருடிகளும் கூட, ஆண்டாள் நாச்சியார் நேரில் வந்து சொல்லட்டும் நம்புகிறோம்; சின்மயி என்னும் ஒருத்தி சொல்லிவிட்டால் உடனே வைரமுத்து தவறு செய்வதாக ஆகிவிடுமா?

இப்படி யார் வேணுமானாலும் யார் மீது வேண்டுமென்றாலும் பழி போடலாம். அவதூறு பரப்பலாம். அதுவும் தப்பு நடந்து பல வருடங்கள் கழித்து.! என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் அவதூறான கொச்சை வார்த்தைகளை பொதுவெளியில் பரப்பி, நாங்கள் அப்படிப்பட்டவர்கள்தான் என்று தெள்ளத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

தவறு நடந்தபோதோ அதற்கு சில வருடங்கள் பிறகோ சொல்லாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். Survival, threat high places , political என்று. இன்று காலம் கனிந்திருக்கலாம். அதனால் ஒரு விஷயம் பல வருடங்களுக்குப் பிறகு வெளி வருகிறது என்பதனாலேயே அது பொய்யாகாது.

ALSO READ:  ‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்கினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. ஒருவர் மீது பழி விழுந்தால் சமுதாயம் என்ன சொல்லும்..?

இவர் அப்படிப்பட்டவர் இல்லை. செய்திருக்க மாட்டார் என்று இவர் மதிப்பு பேசும், நண்மதிப்பு இருந்தால்.!

வைரமுத்து விஷயத்தில் இவருக்கு வேண்டியவர்களே அப்படிச் சொல்லவில்லை. ஆதாரம் இருக்கா, இவ்வளவு வருஷம் ஏன் சொல்லவில்லை, சின்மயி புகழுக்காக ஆதாயத்துக்காக கூச்சலிடுகிறார் என்கிறார்கள்.!

ஆக, வைரமுத்து மீது நம்பிக்கை இல்லை என்பது நன்றாகப் புலப்படுகிறது. சின்மயி மட்டுமா சொல்லி இருக்கிறார் என்றால் இல்லை. இன்னும் சிலரும் சொல்லி இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

சரி , வைரமுத்து எப்படிப்பட்டவர்? இவர் பேச்சில் ஹிந்துக்களுக்கு எதிராக த்வேஷம் இருக்கும்!  பெண்மையை மதிக்காதவர் என்று இவர் வாழ்க்கை சொல்லும்.

ஆதாரமற்று போகிற போக்கில் பேசுபவர் என்று சமீபத்திய நிகழ்வுகள் தெளியப்படுத்தும். சரி அப்போ அவர் எப்படிப்பட்டவர் என்று எப்படி எடை போடுவது?
/
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! – கவிஞர் வாலி.

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

ஊர் சொல்ல மறுக்கிறது!  அதற்கு அவரே விடை தந்தார் அன்று!  ஆண்டாளே நேரில் வந்து சொல்லட்டும் என்று!

ஆம் ! ஆண்டாள் நாச்சியாரே நேரில் வந்து சொல்லட்டும்!  நீ நிரபராதி என்று நம்புகிறோம் !

கருத்து: வானமாமலை பத்மனாபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories