சொந்த ஊரின் ஊரணியை சீரமைத்து சிறப்பு செய்த அயல்நாட்டு மாணவி !

kavya - 2026தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்துக்கு உட்பட்ட மேலவெள்ளூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சரளா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். இத்தம்பதியினருக்கு காவியா என்ற மகள் உள்ளார்.kavya 1 - 2026அவர் அமெரிக்கா நாட்டின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தவறாது தங்கள் சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாக்களில்  3 பேரும் கலந்து கொள்வர். kavaya 2 - 2026இந்த ஆண்டு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற மாதம் இவர்கள் மேலவெள்ளூர் கிராமத்திற்கு வந்தனர். மேல வெள்ளூரில் உள்ள கோயிலுக்கு எதிரே உள்ள ஊருணியை சீமைக்கருவேல மரங்கள், புதர்களாகமண்டி பாசிபடர்ந்த தண்ணீருடன் குப்பைக் கூளங்களுடன் இருப்பதைகண்டு வருந்தினார். ஊருணியை சுத்தப்படுத்தி மழை நீரை சேமித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்ற விரும்பினார்.10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாராமல் இருந்ததை கண்டு அவர் வேதனையுற்றார்.
kavya 3 - 2026இதுகுறித்து கிராமத்து மக்களிடம் விசாரித்த போது, ஊரணியில் சுத்தம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். காவியா தன் தந்தையுடன் கலந்தாலோசித்தார். பின் மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதி அனுப்பினார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கும் பணியில் கவனம் செலுத்துவதை அறிந்த மாணவி காவியா, கடந்த மாதம் ஆட்சியரிடம் சென்று ஊருணியை சீரமைக்க அனுமதி கேட்டார்.

அதனை ஏற்ற ஆட்சியர் திருப்புவனம் வட்டாட்சியர் ராஜாவை கள ஆய்வு செய்து அறிக்கை கேட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரத்திலிருந்து ஊருணியை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளனர். இதற்கான வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கும் பணியும் நடந்துவருகின்றன.

இதுகுறித்து திருப்புவனம் வட்டாட்சியர் ராஜா கூறுகையில்,”ஆட்சியர் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்து வருகின்றார். மேலும் பல நீர்நிலைகளை சீரமைக்க தன்னார்வலர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதனையறிந்த அமெரிக்க மாணவி காவியா ஆட்சியரிடம் அனுமதிகேட்டார். அவரது அனுமதியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டில் இருந்து வந்து சொந்த கிராமத்தில் மேல், இத்தனை அக்கறை காட்டும் சரவணன் குடும்பத்தினரை கிராமத்து மக்கள் போற்றி புகழ்ந்து வருகின்றனர்

 

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories