தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்துக்கு உட்பட்ட மேலவெள்ளூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சரளா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். இத்தம்பதியினருக்கு காவியா என்ற மகள் உள்ளார்.அவர் அமெரிக்கா நாட்டின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தவறாது தங்கள் சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் 3 பேரும் கலந்து கொள்வர். இந்த ஆண்டு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற மாதம் இவர்கள் மேலவெள்ளூர் கிராமத்திற்கு வந்தனர். மேல வெள்ளூரில் உள்ள கோயிலுக்கு எதிரே உள்ள ஊருணியை சீமைக்கருவேல மரங்கள், புதர்களாகமண்டி பாசிபடர்ந்த தண்ணீருடன் குப்பைக் கூளங்களுடன் இருப்பதைகண்டு வருந்தினார். ஊருணியை சுத்தப்படுத்தி மழை நீரை சேமித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்ற விரும்பினார்.10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாராமல் இருந்ததை கண்டு அவர் வேதனையுற்றார்.
இதுகுறித்து கிராமத்து மக்களிடம் விசாரித்த போது, ஊரணியில் சுத்தம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். காவியா தன் தந்தையுடன் கலந்தாலோசித்தார். பின் மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதி அனுப்பினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கும் பணியில் கவனம் செலுத்துவதை அறிந்த மாணவி காவியா, கடந்த மாதம் ஆட்சியரிடம் சென்று ஊருணியை சீரமைக்க அனுமதி கேட்டார்.
அதனை ஏற்ற ஆட்சியர் திருப்புவனம் வட்டாட்சியர் ராஜாவை கள ஆய்வு செய்து அறிக்கை கேட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரத்திலிருந்து ஊருணியை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளனர். இதற்கான வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கும் பணியும் நடந்துவருகின்றன.
இதுகுறித்து திருப்புவனம் வட்டாட்சியர் ராஜா கூறுகையில்,”ஆட்சியர் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்து வருகின்றார். மேலும் பல நீர்நிலைகளை சீரமைக்க தன்னார்வலர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதனையறிந்த அமெரிக்க மாணவி காவியா ஆட்சியரிடம் அனுமதிகேட்டார். அவரது அனுமதியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
வெளிநாட்டில் இருந்து வந்து சொந்த கிராமத்தில் மேல், இத்தனை அக்கறை காட்டும் சரவணன் குடும்பத்தினரை கிராமத்து மக்கள் போற்றி புகழ்ந்து வருகின்றனர்