December 6, 2025, 2:12 AM
26 C
Chennai

ஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்!

big family - 2025
கோப்பு படம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹேரி மாவட்டம் பவுதியான் காலன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மத் ஷெரிப். இவருக்கு மூன்று மனைவிகள் மற்றும் 15 குழந்தைகள் உள்ளனர். மேலும், குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் இவர் கூறியுள்ளார்.

ஷெரிப், தனது 14 வயதில் 1987ம் ஆண்டு ஜெத்தா பேகம் என்பவரை முதலாவதாக திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மூன்று மகன்கள், ஐந்து மகள்கள். அதன்பின்னர் 1990ல் நூர் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்தார். இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன்.

மூன்றாவதாக, 2000ம் ஆண்டில் தரன்னம் பேகம் என்ற நேபாளப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

மொத்தமாக ஷெரிப்பிற்கு மூன்று மனைவிகள் மூலமாக 15 குழந்தைகள் இருக்கின்றனர். , மூன்று மனைவிகளும், 15 குழந்தைகளுடன் ஷெரிப் ஒரே வீட்டில் வசிக்கிறாராம் அதேபோன்று 15 குழந்தைகளின் பெயர்கள் கூட ஷெரிப்பிற்கு சரியாகத் தெரியாதாம்.

ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வந்தவுடன் மாலை அல்லது இரவு, எண்ணிக்கை அடிப்படையிலேயே அனைத்து குழந்தைகளும் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்வார். அவரது மூத்த மகனின் வயது 24, கடைசி மகளின் வயது 2 ஆகும். மற்றவர்கள் இதற்கிடைப்பட்ட வயதினைக் கொண்டவர்கள்.

இதுகுறித்து ஷெரிப் கூறும்போது, ‘அல்லா எனக்கு இவ்வளவு அழகான ஒரு குடும்பத்தை கொடுத்திருக்கிறார். மூன்று மனைவிகளும் ஒற்றுமையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்டத்திலேயே எங்களது குடும்பம் தான் மிகப்பெரியது.

நான் விவசாயம் செய்து வருகிறேன். அல்லாவின் அருளால் இதுவரை குழந்தைகள் பசியுடன் இருந்ததில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று மனைவிகளுக்கும் தனித்தனியே வீடு கட்டுவதற்கு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் மூன்று மனைவிகளின் பெயர்களிலும் விண்ணப்பித்துள்ளார்.குடும்பக் கட்டுப்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில் ஷெரிப் அதுகுறித்து தனக்கு தெரியாது என்று கூறுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories