குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம்: எடப்பாடியார் வேண்டுகோள்!

edappadi palanisamy2 - 2026

குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்!

திருவாரூர் மாவட்டம் கண்டரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் திவ்யா, மகன் ஸ்ரீராம் ஆகியோர் வீட்டிற்கு அருகிலுள்ள திருமலைராயன் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தனர்.

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ வாஞ்சியம் செங்கனூர் கிராமங்களைச் சேர்ந்த கஞ்சமலை மகன் விக்னேஸ்வரன் நடராஜன் மகன் வெங்கடேஷ் ஆகியோர் ஆற்றில் குளிக்கச் சென்றபோது உயிரிழந்தனர்.

இதை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நீர்நிலைகளில் குளிக்கும்போது காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்க அனுமதிக்க வேண்டும்; குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதனிடையே, திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி அருகே குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சிவகிரியை அடுத்துள்ள மேலகரிசல்குளத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜெயசிங் (9), மற்றும் ராமர் மகன் கதிரேசன் (10), ஆகியோர் நேற்று முன்தினம் (செப்., 30) அந்த பகுதியில் உள்ள குளத்தில் நண்டு பிடித்து விளையாட சென்றுள்ளனர்.

இதில் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் குளத்தில் மூழ்கினர். இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அக்கம்பக்கத்தில் தேடினர்.

இந்நிலையில் நேற்று குளத்தில் தேடிய போது இருவரின் உடல்களையும் கண்டறிந்து மீட்டனர். சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories