December 5, 2025, 7:11 PM
26.7 C
Chennai

வீதியில் நின்ற நீதி! போக்குவரத்து விதி!

police - 2025

சிதம்பரத்தில் ஒரு தம்பதி டூவீலரில் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தனர். கஞ்சித்தொட்டி முனை அருகே அவர்கள் வந்தபோது, 2 வாகன போலீசார் அவர்களை வழிமறித்துள்ளனர். ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், இன்னொரு போலீஸ் சார்லஸ்!

குழந்தைகளை வண்டியில் ஏற்றி வந்ததற்கு போலீசார் ஃபைன் போட்டுள்ளனர். இது சம்பந்தமாக அந்த போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

police 1 - 2025

சிதம்பரம் நகரில் காவலராக பணி புரியும் சார்லஸ் என்பவர் காவல் உயரதிகாரி போன்று சிதம்பரம் கஞ்சித்தொட்டி முனை அருகே உதவி ஆய்வாளர் வேல்முருகனை அருகில் வைத்துக்கொண்டு செய்கின்ற செயல்தான் இது.

காவல் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உயரதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் ஆன்லைன் டிஜிட்டல் மெஷினை கையில் வைத்துக்கொண்டு உதவி ஆய்வாளர் முன்னிலையில் குடும்பத்துடன் வருகை தந்த ஒரு தம்பதியினரை வழிமறித்து தனக்கு தெரிந்த அறிந்த விதிமுறைகள் தான் போக்குவரத்தின் உச்சபட்ச விதிமுறைகள் என்பதாக கருதி அந்த தம்பதியினர் மன்றாடி கேட்டும் மனசாட்சி இல்லாமல் மிகுந்த அலட்சியத்துடன் அதிகார திமிருடன் நடந்துகொண்ட விதம் ஒட்டுமொத்த சிதம்பரம் காவல்துறையில் இருக்கும் அனைவருக்கும் இழுக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

police 3 - 2025

காவலர்கள் வாகன சோதனையின்போது உடன் தான் இருக்க வேண்டும் ஆய்வாளர்கள் அல்லது உதவி ஆய்வாளர்கள் தான் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை மாறி உடன் உள்ள காவல் உதவி ஆய்வாளர் முன்னிலையிலேயே விதிமீறல்கள் செய்து அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை மீறி இவர் போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்திருப்பது எந்த அடிப்படையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

police 2 - 2025

ஒரு வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் வருவது குற்றம் என்று கூறியவர் ஒரு தம்பதியினர் தனது மகள்களை அழைத்துக்கொண்டு விடுமுறை தினம் என்பதால் பண்டிகை தினம் வருவதையொட்டி தன் மகள்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்க வேண்டி தருவது பெற்றோரின் கடமை என்பதை உணர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேருக்கு மேல் தனது மகளையும் அழைத்து வந்தது இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிமீறிய உச்சமாக கருதி காவலர் சார்லஸ் பேசுவது மனிதாபிமானத்திற்கு உட்பட்டதாக தெரியவில்லை.

மேலும் விசாரணையில் அந்த அதிகாரி அந்த தம்பதியினரின் நடந்துகொண்ட விதம் பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் மீது உள்ள நன்மதிப்பை குறைக்கும் விதமாகவே அமைந்துள்ளது

மேலும் காவலர் சார்லஸ் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் மோட்டார் பெட்டி கேஸ் மட்டும்தான் கவனிப்பதாகவும் மற்ற பணிகள் அவருக்கு வழங்கப்படுவதில்லை எனவும் தெரியவருகிறது எனவே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வழியில் செயல்படும் நபராக உள்ள காவலர் சார்லஸ் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து அவருக்கு பதிலாக வேறு காவலர்களை கொண்டு காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படாமல் பணிசெய்ய காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories