வீதியில் நின்ற நீதி! போக்குவரத்து விதி!

police - 2026

சிதம்பரத்தில் ஒரு தம்பதி டூவீலரில் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தனர். கஞ்சித்தொட்டி முனை அருகே அவர்கள் வந்தபோது, 2 வாகன போலீசார் அவர்களை வழிமறித்துள்ளனர். ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், இன்னொரு போலீஸ் சார்லஸ்!

குழந்தைகளை வண்டியில் ஏற்றி வந்ததற்கு போலீசார் ஃபைன் போட்டுள்ளனர். இது சம்பந்தமாக அந்த போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

police 1 - 2026

சிதம்பரம் நகரில் காவலராக பணி புரியும் சார்லஸ் என்பவர் காவல் உயரதிகாரி போன்று சிதம்பரம் கஞ்சித்தொட்டி முனை அருகே உதவி ஆய்வாளர் வேல்முருகனை அருகில் வைத்துக்கொண்டு செய்கின்ற செயல்தான் இது.

காவல் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உயரதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் ஆன்லைன் டிஜிட்டல் மெஷினை கையில் வைத்துக்கொண்டு உதவி ஆய்வாளர் முன்னிலையில் குடும்பத்துடன் வருகை தந்த ஒரு தம்பதியினரை வழிமறித்து தனக்கு தெரிந்த அறிந்த விதிமுறைகள் தான் போக்குவரத்தின் உச்சபட்ச விதிமுறைகள் என்பதாக கருதி அந்த தம்பதியினர் மன்றாடி கேட்டும் மனசாட்சி இல்லாமல் மிகுந்த அலட்சியத்துடன் அதிகார திமிருடன் நடந்துகொண்ட விதம் ஒட்டுமொத்த சிதம்பரம் காவல்துறையில் இருக்கும் அனைவருக்கும் இழுக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

police 3 - 2026

காவலர்கள் வாகன சோதனையின்போது உடன் தான் இருக்க வேண்டும் ஆய்வாளர்கள் அல்லது உதவி ஆய்வாளர்கள் தான் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை மாறி உடன் உள்ள காவல் உதவி ஆய்வாளர் முன்னிலையிலேயே விதிமீறல்கள் செய்து அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை மீறி இவர் போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்திருப்பது எந்த அடிப்படையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

police 2 - 2026

ஒரு வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் வருவது குற்றம் என்று கூறியவர் ஒரு தம்பதியினர் தனது மகள்களை அழைத்துக்கொண்டு விடுமுறை தினம் என்பதால் பண்டிகை தினம் வருவதையொட்டி தன் மகள்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்க வேண்டி தருவது பெற்றோரின் கடமை என்பதை உணர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேருக்கு மேல் தனது மகளையும் அழைத்து வந்தது இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிமீறிய உச்சமாக கருதி காவலர் சார்லஸ் பேசுவது மனிதாபிமானத்திற்கு உட்பட்டதாக தெரியவில்லை.

மேலும் விசாரணையில் அந்த அதிகாரி அந்த தம்பதியினரின் நடந்துகொண்ட விதம் பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் மீது உள்ள நன்மதிப்பை குறைக்கும் விதமாகவே அமைந்துள்ளது

மேலும் காவலர் சார்லஸ் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் மோட்டார் பெட்டி கேஸ் மட்டும்தான் கவனிப்பதாகவும் மற்ற பணிகள் அவருக்கு வழங்கப்படுவதில்லை எனவும் தெரியவருகிறது எனவே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வழியில் செயல்படும் நபராக உள்ள காவலர் சார்லஸ் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து அவருக்கு பதிலாக வேறு காவலர்களை கொண்டு காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படாமல் பணிசெய்ய காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories