பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றும் உரை: நேரலை

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

புது தில்லி:

பிரதமர் நரேந்திர  மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையின் நேரலை:

பிரதமர் மோடி 7.30 மணிக்கு பேசியதன் தமிழாக்கம்(ஏறத்தாழ)…!!

இது ஒரு போர் .. !!

உண்மையை பேசுகிறேன் ,,
கண்டிப்பா இதை செய்வேன் ,, !!

இந்த நாட்டை முன்னேற்றி காட்டுவேன் .. எதிர் கட்சிகள் எதற்கு எதிர்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை …!!
நான் சொல்வது இப்போது கசப்பாக தெரியும் ..
ஆனால் என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்.

நம்முடைய விருப்பு வெறுப்பையெல்லாம் கொஞ்சம் சகித்து கொள்ள வேண்டும்.
இதுவரை வங்கிகளுக்கு போகாத சாதாரண மக்கள் கூட வங்கிகளுக்கு போக ஆரம்பித்து விட்டார்கள்.
பணத்தை எடுக்க நீங்கள் மிகவும் கஷ்டப் பட்டத்தையும் நான் அறிவேன்.சாதாரணமாக போர்க்காலங்களில் மக்கள் காட்டும் நாட்டுப்பற்றை இந்தவிஷயத்திலும் காட்டி ஒத்துழைத்திருப்பது மிகவும் வியப்புக்குரியது.
இது ஒரு மிகப்பெரிய சாதனை.அவர்கள் தியாகம் வீண்போகாது.

கருப்பு பண நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கை எடுத்திருக்கும் இந்த நேரத்தில் , தேச பற்று உள்ள லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் இப்போது இருந்தால் இந்த திடடத்தை பாராட்டி இருப்பார்கள் , அவர்களை போல் நாம் ஒவ்வொரு வரும் தேசத்துக்காக மாறவேண்டும்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

முன்பைவிட மக்களுக்கு இப்போது தேச பற்று அதிகம் வந்து விட்டது.

எங்கள் அரசு மீது இன்று நீங்கள் கோப படலாம். ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக நினைப்பீர்கள்.

அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்த அன்பு எனக்கு மிக பெரிய ஆசியே.. சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை செய்து அரசாங்கத்தை மிக தெளிவாக நடத்துவோம்.

நல்லவனுக்கு எங்கள் அரசாங்கம் நல்லது தான்.
ஆனால் கெடடவனுக்கு கெட்ட அரசாங்கமே, அரசின் முக்கிய நோக்கம் நேர்மையானவர்களை எப்படி காப்பது என்பதே.நேர்மையானவர்கள் பக்கம் எனது அரசு எப்போதும் துணைநிற்கும்.

தீவிரவாதிகளுக்கு இந்த அரசாங்கம் கசப்பாக தான் தெரியும். தவறு செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கபடுவார்கள் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.தவறிழைப்பவர்கள்,தவறிழைத்தவர்கள்
மீது நடவடிக்கைகள் தொடரும்.

இவ்வளவு குறைந்த நாளில் எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய மாற்றத்தை யாரும் உருவாக்கியதில்லை.பாமர மக்களுக்கு,நடுத்தர மக்களுக்கு வீடு வாங்குவது கனவாக இருந்தது.
அது முடிவு வரும்.தலித்,சிறுபான்மையினர்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு 9 லட்சம்
வரையிலான கடனுக்கு 4% அளவிலும் 12லட்சம்
வரையிலான கடனுக்கு 3% அளவிலும் வட்டி தள்ளுபடியாகும்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் ருப்பே கார்டுகளாக மாற்றப்பட்டு கூட்டுறவு வங்கிகளின் மீது அதிக கடன் வழங்கப்படும்.
அதற்காக 20000 கோடிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.மூன்றுகோடி விவசாயிகளுக்கு கார்டுகள் மாற்றப்படும்.
குறிப்பிட்ட சில விவசாய கடன்களுக்கு முதல்
60 நாட்களுக்கு வட்டியை அரசே செலுத்தும்.

மூத்தகுடிமகன்களின் வைப்புநிதிகளுக்கு 8% வட்டி வழங்கப்படும்.

சிறு,குறு தொழில்களுக்கு கடன் உத்தரவாத தொகை 1 கோடியிலிருந்து 2 கோடிகளாக உயர்த்தபடுகிறது.சிறு வியாபாரிகளுக்கு 2கோடிவரை அரசே பிணை உத்தரவாதம் வழங்கும்.

கர்ப்பிணிப்பெண்களுக்கு 6000 உதவித்தொகை
வழங்கப்படும்.

ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் மேல் என
ஒப்புக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 24லட்சம் பேர்களே என்பது ஏற்க கூடியதா?

பொருளாதாரத்திற்கு வெளியே இருந்த கருப்பு பணம் தொழில் நுட்ப உதவியுடன் உள்ளே வந்து விட்டது.

பீம் செயலி பயன்படுத்த கோருகிறேன்.

நபார்டு மூலம் சென்றமாதம் 20000 கோடியாக வழங்கப்பட்ட கடன் வரும் மாதம் 41000 கோடியாக உயர்த்தபடுகிறது.

பண மதிப்பிழப்பு முக்கிய புள்ளிகள் முகம் எப்படி பட்டது என்று தெரிந்து விட்டது.அதிகாரிகள் பலரின் முகத்திரை கிழிந்துவிட்டது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

நள்ளிரவு வரை வங்கிப்பணியாளர்கள் (பெண்களையும் சேர்த்து) பணியாற்றியது மிகவும் பாராட்டுதலுக்குரியது.பெரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியமைக்கு
பாராட்டுகள்.

நம் தேசத்தில் எல்லா மக்களுக்கும் சரியான திட்டங்களை வகுத்து கொடுப்போம் ,,

நாடாளுமன்றத்திற்கும் , சட்ட மன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முயற்சிப்போம்.

100 நுறு வருஷத்திற்கு பிறகு நம்ம நாடு எப்படி இருக்கணும், இதற்க்கு முன்னாள் எப்படி இருந்தது , என்பதை மனதில் வைத்தே திட்ட்ங்கள் ,,

ஊழலை எதிர்த்து மக்களும் அரசும் போராட வேண்டும். தீவிர வாதம் நோக்கி போன இளைஞர்கள் நல்வழிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.நக்ஸல்கள் ஒடுக்கபட்டுள்ளார்கள்.

தவறு செய்த வங்கி அதிகாரிகளுக்கு தணடனை கண்டிப்பாக உண்டு….!

(இது பேசியபோதே மொழிமாற்றம் செய்யபட்டதால் சில விடுபட்டிருக்கலாம்)

Related articles

Recent articles

spot_img