சென்னை:
வன்முறை பயன் தராது என்று தனது டிவிட்டர் பதிவில் போராட்டக்காரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார்.
அவரது டிவிட்கள்:
வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம்.
இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும்.
வன்முறை பயன்தராது. இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது. மக்களாக இருக்கக் கூடாது.
அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை.
யார் ஒருவர் கண்ணியம் தவறினாலும் அது சங்கமித்திருக்கும் அனைவரையும் பாதிக்கும். வாழ்த்துக்கள் விமர்சனமாகாதிருக்க விரசக் கேலிகளை தவிர்க்கவும்
அமேரிக்க சோடா கம்பேனிகள் ஜல்லிகட்டு sponsors ஆக வாய்ப்புண்டு. எச்சரிக்கை
None can take away your rights. Pls. stay calm. The highest office in the country is watching & will talk in your favour soon. Maintain calm
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017