ஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக?! டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்!

Published:

mathan tweet horz - 2026

வின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனுக்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

KalyanBJP @kalyanbjmm அறிவில்லாதவன், தந்தரப்பில் நியாயம் இல்லாதவன் தான் கொலை மிரட்டல் விடுவான். இது உதயகுமார் காலம் இல்லை
@mkstalin . தேவைப்பட்டால் அறிவாலயமும் புகுவோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்… ஏற்கெனவே கமலாலயம் புகுந்து தாக்கிய கணக்குக்கு பதில் ஒன்னு பாக்கி இருக்கு
@MaridhasAnswers

https://twitter.com/kalyanbjmm/status/1193538841988063232

மிசா காலத்தில் ஸ்டாலின் கைதானாரா என்று ஆதாரம் தேடினால் விக்கி லீக்ஸ் சொல்லும் தகவல் இது. அவர் மீது பல பாலியல் புகார்கள் இருந்தது என்கிறது.
இது உண்மையா ? என்ன என்ன புகார்கள் ஸ்டாலின் மீது வந்தது என்று முழு விவரங்களை வெளியேக் கொண்டுவருவது காலத்தின் கட்டாயம்.
எவ்வளவு காலம் ஆனாலும் உண்மையை உலகம் அறிந்தாக வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும். – மாரிதாஸ் M

திமுக @arivalayam தனக்கு கொலை மிரட்டல் விடுகின்றது என்று @winnews_in ஊடகவியலாளர் மதன் பொதுவெளியில் அறிவித்த ஒரு சில மணிநேரங்களில் வெளியுலக தொடர்பை முடக்கும் வகையில் திமுவினர் அழுத்தம் காரணமாக
@twitterindia அவரது கணக்கை முடக்கியது கடும் கண்டனத்துக்குரியது. #WeSupportMadan

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

@mkstalin எதிராக ஆதாரங்களை வெளியிடும் ஒரு ஊடகவியலாளர் குரல்வளை நெறிக்கப்படுமெனில் இது ஜனநாயகத்துக்கே பேராபத்தாகும்.

தினகரன் எரிப்பு சம்பவம் போன்று ஊடகத்தினை மிரட்டி அடிபணிய வைக்கும் திமுகவிற்கு எதிராக மற்ற ஊடகவியலாளர்கள் வாய் மௌனித்து நிற்பது தகுமா?

அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு திமுகவே முழுப்பொறுப்பு என்றும் உடனடியாக
@cmotamilnadu தலையிட்டு மேற்படி நெறியாளர்க்கு உயிரை காக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். #WeSupportMadan முடக்கு வாதம் வந்த பயலுக… இவனுக முடக்கிட்டா நாங்க முடங்கிருவோணம்னு நினைப்பு… ஒரு தர்மத்துக்கு கட்டுப்பட்டு நிக்கிறோம்.

விக்கிலீக்ஸ் ஆதாரம் : https://wikileaks.org/plusd/cables/09CHENNAI223_a.html

stalin misa wikileaks - 2026

வாட்ஸ் அப் வாயிலாக பகிரப்படும் இன்னுமொரு கருத்து…

வின் டிவி செய்திக்காரன் மதன் ரவிசந்திரனுக்கு திமுக ரவுடிகள் தொடந்து கொலை மிரட்டல்…

SV சேகர் ஏதோ ஒரு மீடியா கேமராமேன பற்றி ஏதோ சொல்லி விடடார் என்ற உடன், தமிழ் நாட்டில் உள்ள மீடியா பொருக்கிகள் 90 சதவீதம் பேர் SV சேகருக்கு எதிராக அவர் வீட்டில் கல் எரிய வைத்தீர்கள்.

இப்போது உங்கள் சக மீடியா அன்பருக்கு தொடந்து கொலை மிரட்டல், எங்க இருக்கிறீர்கள் மீடியா பொறுக்கிகளே.

90 சதவீத மீடியா ரவுடிகள் திமுக அடிமை அல்லது அவர்களுக்கு விலை போனவர்கள் என்பது மட்டும் புரிகிறது…

எது எப்படியோ தமிழக ஊடகத்தில் மீண்டும் ஒரு நேர்மையாளர் கிடைத்து விட்டார் வாழ்த்துக்கள் #மதன்

நெறியாளர் மதன் ,, சற்றே நிதானமாக அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.. உங்களை போன்றவர்கள் பெரிய ஆளாக வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

ஊடகத்தில் ஒரு குறிப்பிட்ட ( திமுக, திக ) குரூப்பின் ஆதிக்கமே நிறைந்துள்ளது..

தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் நியாயம் தர்மம் பேச கூட நெறியாளர் கிடையாது.. மேலும் எந்த நெறியாளரும் திமுக, திக, கம்னியூஸ்ட் கட்சிக்காரர்கள் பேசும் போது இடைமறித்து பேசுவதில்லை.. பிஜேபி, அதிமுக காரர்கள் பேசும் போது இடை மறிக்காமல் இருப்பதில்லை,,

எவ்வளவு நேரம் பேசினாலும் எந்த சீட்டையும் பார்க்காமல் பேசும் தலைவர் மோடி மட்டும் தான் ,, ஆனால் 5 நிமிடம் கூட துண்டு சிட்டு இல்லாமல் பேச முடியாத தலைவர் ஸ்டாலின் இதை பற்றி இந்த ஊடகம் என்றைக்காவது கேள்வி கேட்டது உண்டா ?

இதில் யார் அறிவார்ந்தவர் என்று சிந்திக்கும் திறன் ஊடகங்களுக்கு உண்டா ? ஆனால் இந்த ஊடகங்கள் குறை கூறுவது மோடியை மட்டுமே,,, இது பணமா, பயமா என்று தெரியவில்லை

தமிழை “காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர், திருக்குறள் ” மலம் ” என்று சொன்னவர். இவரை பற்றி ஒரு வார்த்தை தட்டி கேக்க துப்பில்லாத ஊடக நெறியாளர் திருவள்ளுவர் சிலைக்கு சந்தானம் பூசியதை விமர்ச்சிக்கிறான்,, அப்படி என்றால் இந்த தமிழ்
ஊடகத்தில் நிலையை பாருங்கள்

Nelson Xavier, பனிமலர், கார்த்திகை செல்வன், செந்தில் போன்ற ஊடகவியலாளர்கள் தங்களை வெளிப்படையாக திராவிட ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள். அவர்கள் இதுவரை விமர்சனத்திற்கு உட்படுத்தப்படவில்லை.

பாண்டே வெளிப்படையாக எந்த பக்கமும் ஆதரவு எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டதில்லை. ஆனால் அவர் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

மதன்ரவிச்சந்திரன் வெளிப்படையாக நியாமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவரின் twitter ID இன்று முடக்கப்பட்டு விட்டது. கருத்து சுதந்திர போராளிகள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. ஊரெல்லாம் கருத்து சுதந்திர பாடமெடுக்கும் இடதுசாரிகளும் இப்போது மௌனம்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

தமிழகத்தைப் பொறுத்தவரை நடுநிலை ஊடகவியலாளர்கள் என்று பெயர் பெற இரண்டு தகுதிகள் வேண்டும்.

(i) Loyola கல்லூரியில் படித்திருக்க வேண்டும்.
(ii)திராவிட, கம்யூனிஸ்ட் ஆதரவாக இருக்க வேண்டும்.
நடுநிலை என்றாலே திராவிட ஆதரவாளராக நீங்கள் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

திராவிடத்தை கேள்வி கேட்டாலோ விமர்சித்தாலோ நீங்கள் வலதுசாரி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.

70 வருடமாய் திராவிடம் தனிக்காட்டு அரசனாக அமர்ந்திருந்தது. விமர்சனத்திற்கு உட்படுத்திய சோ.ராமசாமி போன்றோரும் பார்ப்பனர் என்று முத்திரை குத்தப்பட்டனர்.

இப்போது மாரிதாஸ், மதன் போன்ற பலரும் கேள்வி எழுப்பத் துவங்கியதும் 200 ரூபாய் உ.பி க்களால் பொறுக்க முடியவில்லை. சூடு தண்ணிரில் விழுந்த பல்லியை போல் துள்ளி குதிக்கின்றனர். ஊருக்கு மட்டுமே பாடம் எடுப்பார்கள். தங்களை கேள்வி கேட்டால் குதிப்பார்கள் இந்த 200 ரூபாய் உ.பி கூட்டம்.

முதலில் பாண்டே, இரண்டாவது மதன்: இரண்டு பேர் நேர்மையாய் மக்களின் எண்ண பிரதிபலிப்பை கேள்வியாய் கேட்க ஆரம்பித்த உடன் திராவிடமே திகைத்து போய் உள்ளது இதை போல் பலர் மண் உருவானால் என்னவாகும்

இன்னும் பலர் மேலும் மேலும் இவர்களை வெறுப்பேற்ற வேண்டும். தானாக முகத்திரையை கிழித்துக் கொள்வார்கள்.

திராவிடத்தின் இறுதிக்காலம் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கிக்கொண்டிருப்பது தெளிவு.

தேசிய #ஊடகங்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வு கூட இங்குள்ள #தமிழ் #ஊடகங்களுக்கு கிடையாது இதற்கிடையில் இவர்களுக்கு #உண்மைஉடனுக்குடன் ஏகவசனம் வேற!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img