2015 உலகக் கோப்பையில் சாதித்த 5 பேட்ஸ்மென்கள்

Published:

2015 உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்தத் தொடரில் சாதனை படைத்த டாப் 5 பேட்ஸ்மென்கள் விவரம் வெளியாகியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 22,293 ரன் எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 38 செஞ்சுரிகள், அவற்றில் 2 இரட்டை சதங்கள், (அதுவும் முதல் முதலாக உலகக் கோப்பை இரட்டை சதம்), நூறு பந்துக்கு 89 ரன் என்ற ரன் ரேட் என இந்த உலகக் கோப்பை சாதனைகள் நீள்கின்றன. இவற்றில் பேட்டிங்கில் அசத்திய 5 பேர், மார்டின் குப்டில், குமார் சங்ககரா, ஏபி டி விலியர்ஸ், பிரெண்டன் டெய்லர், ஷிகர் தவான்.. ஆகியோர். குப்டில்: 547 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். 163 பந்தில் 237 எடுத்து உலக கோப்பை கிரிக்கெட் ரன்னின் உச்ச பட்ச சாதனை படைத்தார். குமார் சங்ககரா: 541 ரன் குவித்து இரண்டாமிடம். இதில் சராசரி 108.20 என்பது குறிப்பிடத்தக்கது. ஏபி டிவில்லியர்ஸ்: 482 ரன் குவித்தார். ஷிகர் தவான்: 449 ரன் எடுத்துள்ளார். பிரண்டன் டெய்லர்: 433 ரன் குவித்துள்ளார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img