December 6, 2025, 1:05 PM
29 C
Chennai

கன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்!

IMG 20191117 WA0002 - 2025

பளாரென்று கன்னத்தில் அறைந்த எஸ்ஐ. திருப்பி அடித்த ஆடு மேய்ப்பவர். உண்மையில் என்ன நடந்தது?

கன்னத்தில் பளார் என்று அறைந்த சப்-இன்ஸ்பெக்டரை ஆடு மேய்ப்பவர் திரும்ப அடித்த சம்பவம் கர்னூல் மாவட்டம் ‘ஆலூரு’ மண்டலத்தில் நடந்துள்ளது. பைக்கில் செல்லும்போது வழிவிடும் விஷயத்தில் வாக்குவாதம் முற்றி இவ்வாறு நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

எஸ்ஐ.,யை எதிர்த்து வாதாடி திரும்ப அடித்ததால் அங்கு போலீசார் கூடினர். அதைக்கண்டு ஆடு மேய்ப்பவர் நைஸாக நழுவி ஓடிப் போனார்.

‘ ஆதோனி’ செல்வதற்காக ‘ஹாலஹர்வி’ எஸ்ஐ பாலநரசிம்மலு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். ‘மனோகுர்த்தி, கோனேஹாலு’ கிராமங்களின் இடையே வழியை மறித்துச் சென்று கொண்டிருந்த ஆடுகளைக் கண்டு பைக்கை நிறுத்தினார்.

“ஆடுகளை ஓரமாக நகர்த்தாமல் என்ன செய்து கொண்டிருக் கிறாய்?” என்று ஆடுமேய்ப்பவரை திட்டியதால், “அவை வாயில்லா ஜீவன்கள். அவற்றுக்கு என்ன தெரியும்?” என்று அதே தோரணையில் ஆடு மேய்ப்பவரான பீரப்பா பதிலளித்தார்.

அது பொறுக்காத எஸ்ஐ., பாலநரசிம்மலு பைக்கை விட்டிறங்கி ஆடு மேய்ப்பவரின் கன்னத்தில் அறைந்தார். யூனிபார்மில் இல்லாமல் இருந்ததால் போலீஸ் என்று அறியாத ஆடு மேய்ப்பவரும் திரும்ப எஸ்ஜ.,யின் கன்னத்தை பதம் பார்த்தார் .

இருவரும் அவ்விதம் பரஸ்பரம் அடித்துக் கொண்டதால் எஸ்ஐ., உடனே ஆலூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு விவரம் தெரிவித்தார். போலீசார் அங்கு கூடுவதைக் கண்ட பீரப்பா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories