கன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்!

Published:

IMG 20191117 WA0002 - 2026

பளாரென்று கன்னத்தில் அறைந்த எஸ்ஐ. திருப்பி அடித்த ஆடு மேய்ப்பவர். உண்மையில் என்ன நடந்தது?

கன்னத்தில் பளார் என்று அறைந்த சப்-இன்ஸ்பெக்டரை ஆடு மேய்ப்பவர் திரும்ப அடித்த சம்பவம் கர்னூல் மாவட்டம் ‘ஆலூரு’ மண்டலத்தில் நடந்துள்ளது. பைக்கில் செல்லும்போது வழிவிடும் விஷயத்தில் வாக்குவாதம் முற்றி இவ்வாறு நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

எஸ்ஐ.,யை எதிர்த்து வாதாடி திரும்ப அடித்ததால் அங்கு போலீசார் கூடினர். அதைக்கண்டு ஆடு மேய்ப்பவர் நைஸாக நழுவி ஓடிப் போனார்.

‘ ஆதோனி’ செல்வதற்காக ‘ஹாலஹர்வி’ எஸ்ஐ பாலநரசிம்மலு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். ‘மனோகுர்த்தி, கோனேஹாலு’ கிராமங்களின் இடையே வழியை மறித்துச் சென்று கொண்டிருந்த ஆடுகளைக் கண்டு பைக்கை நிறுத்தினார்.

“ஆடுகளை ஓரமாக நகர்த்தாமல் என்ன செய்து கொண்டிருக் கிறாய்?” என்று ஆடுமேய்ப்பவரை திட்டியதால், “அவை வாயில்லா ஜீவன்கள். அவற்றுக்கு என்ன தெரியும்?” என்று அதே தோரணையில் ஆடு மேய்ப்பவரான பீரப்பா பதிலளித்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

அது பொறுக்காத எஸ்ஐ., பாலநரசிம்மலு பைக்கை விட்டிறங்கி ஆடு மேய்ப்பவரின் கன்னத்தில் அறைந்தார். யூனிபார்மில் இல்லாமல் இருந்ததால் போலீஸ் என்று அறியாத ஆடு மேய்ப்பவரும் திரும்ப எஸ்ஜ.,யின் கன்னத்தை பதம் பார்த்தார் .

இருவரும் அவ்விதம் பரஸ்பரம் அடித்துக் கொண்டதால் எஸ்ஐ., உடனே ஆலூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு விவரம் தெரிவித்தார். போலீசார் அங்கு கூடுவதைக் கண்ட பீரப்பா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img